search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "directorate of revenue intelligence"

    • காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
    • வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள்.

     ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட  50 முதல் 60  பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டிஆர்ஐ அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.

    இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

    டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

    ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்த 229.8 கிலோ கஞ்சாவை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #CannabisSeized #Andhra #TamilNadu
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்துவதை தடுக்க ஆந்திரா மற்றும் தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது காரில் 229.8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர்.



    அவர்களிடம் இருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட இந்த கஞ்சா, தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரிவித்துள்ளார். #CannabisSeized #Andhra #TamilNadu
    ×