என் மலர்
நீங்கள் தேடியது "Dubai open"
- துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
- இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
துபாய்:
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-2, 6-1 என பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
- சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-4, 6-0 என இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.
மேலும், 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்ற ரஷிய வீராங்கனை ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஷ்விடெக் உடன் மோதுகிறார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரஸ்சை சேர்ந்தவருமான அரினா சபலென்கா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டாசன் 6-3, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா துபாய் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 6-4, 4-6, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
இறுதிப்போட்டியில் ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனுடன் மோதுகிறார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இந்த தொடரில் இருந்து பிரிட்டன் வீரர் டிராபர் விலகியுள்ளார்.
துபாய்:
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சுற்றுகள் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி வீரரான ஜாக் டிராபர் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
எனது உடலை நிர்வகிப்பதற்கும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கும் நான் குழு ஆலோசனையைப் பெறுகிறேன். துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் நான் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-1), 10-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் குயிண்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என ரூப்லெவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஹேலிஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
ரஷியா வீரரான ரூப்லெவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் யூகோ ஹம்பர்ட் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என யூகோ ஹம்பர்ட் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் யூகோ ஹம்பர்ட் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் சமீபத்தில் நடந்த ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வென்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் பெரிகார்டு உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.