என் மலர்
நீங்கள் தேடியது "Erode East ByPolls"
- இளையமகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
- ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தை சேர்ந்தவர்களே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக இளங்கோவன் போட்டியிடுவதையே கட்சினர் விரும்புகிறார்கள். இதற்காக நிர்வாகிகள் பலர் நேரில் வற்புறுத்தியும் வருகிறார்கள்.
ஆனால் இளங்கோவன் போட்டியிட தயங்குவதாகவும் அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு உடல்நிலையும் சரியில்லை. மனநிலை பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்.
எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருந்தாலும் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் எனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார்.
காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் 2 நாளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளங்கோவன் போட்டியிட விரும்பாததால் சஞ்சய் சம்பத் களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
42 வயதாகும் சஞ்சய் சம்பத் இதுவரை தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. பள்ளிப் படிப்பை கோத்தகிரியிலும், சென்னையிலும் முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பையும், சென்னை ஐ.ஐ.டி.யில் மனித வளத்துறை படிப்பும் படித்துள்ளார். புதுடெல்லியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
தேர்தல் நேரங்களில் காங்கிரசுக்காக பணியாற்றியும், காங்கிரஸ் சமூக வலைத்தளபிரிவில் பணியாற்றியும் அனுபவம் பெற்றவர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட மறுத்துள்ளது தி.மு.க. தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.