என் மலர்
நீங்கள் தேடியது "executed"
- தனிநபர்களை கடத்தி விசாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
- கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
தெக்ரான்:
இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
- கடந்த மாதம் 15-ந்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
4 மாத குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அபுதாபியில் உள்ள அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (வயது 39) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜாதி கான். 39 வயதான இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பூர்வமாக விசா பெற்று அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்) சென்றுள்ளார்.
2022-ம் ஆண்டு அவரை வேலைக்கு அழைத்த உரிமையாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பராபரிக்கும் பணியை செய்து வந்தள்ளார். இந்த குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசிகள் போட்டு வந்துள்ள நிலையில் டிசம்பர் 7-ந்தேதி திடீரென உயிரிழந்துள்ளது.
ஷாஜாஹிதான் கொலை செய்யதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில் குழந்தையை கொன்றதாக ஷாஜாஹின் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு கடந்த 2023-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆணடும் பிப்ரவரி மாதம் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி ஷாஜாதியிடம் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது தனக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்திடம் தனது மகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணையின்போது, மத்திய வெளியுறவுத்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் "கடந்த 15-ந்தேதி ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 28-ந்தேதி இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. மார்ச் 5-ந்தேதி அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
- மன்னிப்பு கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
- ஆனால், ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம்:
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் என்ற பெண்ணுக்கு அபுதாபியில் சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் முகமது ரினாஷ் அரங்கிலொட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில். இதில், அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், முகமதுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முரளீதரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர்ட் ஆப் கேஸ்ஸேசன் இந்த தண்டனையை உறுதிசெய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்தது. இதுபற்றி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டும் பலனளிக்கவில்லை. இந்த தண்டனை பற்றிய விவரங்கள் தொடர்புடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் இறுதிச்சடங்கிற்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.