என் மலர்
நீங்கள் தேடியது "Fair Delimitation"
- கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
- அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.
- ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா?
- தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னையில் இன்று பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்- மந்திரிகள் உள்பட 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பார்த்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் நோக்கத்திற்காகவா? என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கூறியதாவது:-
என்னுடைய கருத்தின்படி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காகவா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இது பற்றி சிந்திக்கட்டும். ஆனால் மீடியாக்கள், உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கப்பட்டுள்ளதா? என அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனையும் தொடங்கப்படவில்லை. சட்டம் தொடர்பான வரைவு கூட இன்னும் செய்யப்படவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு சட்டம் வரைவு உருவாக்கும்போது, மத்திய அரசு செயல்முறைக்கு தயாராகும்போது, இது தொடர்பாக கேள்வி எழும்.
தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரையொருவர் நம்புவதும், அனைவரையும் அழைத்துச் செல்வதும் ஜனநாயகத்தின் சாராம்சம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்துள்ளார்.
- கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
- அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர்.
* கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
* கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
* முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும்.
* அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
* தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிலுவைக்கு வரும்.
* பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விரைவில் நடக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
* தெளிவை ஏற்படுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது.
* அழைப்பு விடுத்ததில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் நேரில் பங்கேற்க முடியவில்லை, மற்ற அனைவரும் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
- இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ்இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
* இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
* கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.
* உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு
* இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்று கூறினார்.
- நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
- ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
- அடுத்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நீங்களும் உங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
- கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் பேசியதாவது:-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது. இதனால் தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். இந்த நடவடிக்கை மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ? அங்கெல்லாம் அதனை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.
- தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநில முதல்-மந்திரிகள், ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.
* தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
- நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
- பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சி பாதித்திருக்கும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது.
* பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார்.
- குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
- பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
* தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா?
* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும்.
* பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
* பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாக குற்றம்சாட்டினார்.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
- பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:
* தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம்.
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
* தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும்.
* பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது.
* மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு.
* பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்.
இவ்வாறு அவர் கூறினார்.