என் மலர்
நீங்கள் தேடியது "Fake Video"
- ‘டீப்பேக்’ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- ‘டீப்பேக்’ படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும்.
புதுடெல்லி:
புகைப்படம், வீடியோ, ஆடியோவை அச்சு அசலாக போலியாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 'டீப்பேக்'. இதன் மூலம் ஒருவரின் புகைப்படம், வீடியோவில் மற்றொருவரின் உருவத்தை ஏற்றி, நிஜம் போல உருவாக்க முடியும். ஆடியோவையும் மாற்ற முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் போன்ற பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டது, மிகுந்த சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த தொழில்நுட்பமானது சமூகத்தில் பெரும் நெருக்கடியையும், அதிருப்தியையும் உருவாக்கலாம். இது தவறாக பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலியாக வீடியோ, ஆடியோவை உருவாக்கும் 'டீப்பேக்' விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி அந்த நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் 'டீப்பேக்' விஷயத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கையை சமூக ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எனவே அடுத்த 3, 4 நாட்களில், சமூக ஊடக நிர்வாகிகளுடன் நாங்கள் கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில் 'டீப்பேக்' தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டு, அதை தடுப்பதற்கும், 'டீப்பேக்' படங்கள், வீடியோக்களை அகற்றுவதற்கும் சமூக ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களும் அதில் அடங்கும்.
'டீப்பேக்' படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை அகற்றாத சமூக ஊடகங்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது.'
இவ்வாறு அவர் கூறினார்.
- கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- விடைத்தாள் கிழிந்தது என்ற ஆயுஷின் கூற்றுகள் பொய்யாகி விட்டது.
புதுடெல்லி:
நீட்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட்தேர்வு தொடங்கு வதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் இருந்து வினாத் தாள் வெளியாகி முறைகேடு நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறிய அலட்சியத்துக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வு எழுதிய ஆயுஷி படேல் என்பவர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது விடைத்தாள் கிழிந்து இருந்தது. இதனால் தேசிய தேர்வு முகாமை தனது முடிவை அறிவிக்கத் தவறியது. இதனால் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி யானது. ஆயுஷி படேல் மீது தேசிய தேர்வு முகமை சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக ஆயுஷி படேல் வைரலான வீடி யோவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பகிர்ந்து இருந்தார். அதோடு தேர்வு முடிவுகளில் முரண்பாடு இருப்பதாக ஆயுஷி படேல் கூறியதையும் பிரியங்கா ஆதரித்தார். முறைகேடு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது ஆயுஷி படேல் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷெகாத் புனவல்லா கூறியதாவது:-
பிரியங்காவும், காங்கிரசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போலித்தனத்தை பயன்படுத்துகிறார்கள். அவர் வெளியிட்ட ஆயுஷி படேல் வீடியோ போலியானது. விடைத்தாள் கிழிந்தது என்ற ஆயுஷின் கூற்றுகள் பொய்யாகி விட்டது. இதனால் பிரியங்காகாந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.