என் மலர்
நீங்கள் தேடியது "fishermens"
பட்டினப்பாக்கத்தில் கடல்சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் சுமார் 25 வீடுகள் இடிந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
மீனவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து வருகிறது.
கடல் சீற்றம் தொடர்வதால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை காவு வாங்கியுள்ளது.
காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மீனவர் ஒருவர் கூறும்போது, கடல் சீற்றத்தால் ஆண்டுதோறும் வீடுகளை இழந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என்றும் கூறினார்.
எனவே பட்டினப்பாக்கம் பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 வாரங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து வருகிறது.
கடல் சீற்றம் தொடர்வதால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை காவு வாங்கியுள்ளது.
காலை மற்றும் இரவு நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் வசிப்பவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மீனவர் ஒருவர் கூறும்போது, கடல் சீற்றத்தால் ஆண்டுதோறும் வீடுகளை இழந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என்றும் கூறினார்.
எனவே பட்டினப்பாக்கம் பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.