என் மலர்
நீங்கள் தேடியது "Flight Ticket"
புதுடெல்லி:
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது. 3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன.

இந்த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PMModi #airindia
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:-
அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்ட விரோதமாக பல நாட்கள் தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்க அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 மாதம் அமலில் இருக்கும். இந்த 3 மாதங்களுக்குள் அமீரகத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் தாங்களாக முன் வந்து பொது மன்னிப்பை பெற்று வெளியேறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் ‘அப்ஸ்கான்டிங்’ எனப்படும் நிறுவனங்களால் தலைமறைவானவர் என்று பதிவு செய்யப்பட்ட நிலையில் (ஸ்டேட்டஸ்) உள்ளவர்கள் குடியுரிமை அலுவலகங்களில் 500 திர்ஹாம் கட்டணம் செலுத்தி தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம்.
இந்த நிலையை மாற்றிக்கொண்டால் தொடர்ந்து அவரது விசாக்காலம் வரை அமீரகத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் இவர்கள் மீதுள்ள பயணத்தடையும் நீக்கம் செய்து தரப்படும்.
அமீரகத்தில் வசித்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டவர் அல்லது காலாவதியான நிலையில் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தங்கள் நாட்டின் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்திடம் விண்ணப்பித்து வெளியேறும் அனுமதி கடிதம் (அவுட் பாஸ்) பெற வேண்டும். அந்த கடிதம் பெறுவதற்கு தூதரகங்கள் அல்லது துணைத்தூதரகங்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.
அவர்களுக்கு அடுத்த 10 நாட்களில் பயணத்தடை இல்லாமல் வெளியேறுவதற்கான அனுமதி (எக்சிட் பர்மிட்) வழங்கப்படும். இதில் அந்த அவுட் பாஸ் பெறுவதற்கு பல்வேறு நாட்டு தூதரகங்கள் சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.
இந்திய தூதரகம் பொது மன்னிப்பு பெற்று பண வசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக அவுட் பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அவசர காலத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூதரகத்தின் இந்திய சமூக நல நிதியில் இருந்து செலவிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #UAEAmnesty2018 #IndianDiplomacy