என் மலர்
நீங்கள் தேடியது "Food Delivery Company"
- பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.
- இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக விளங்கும் ஸ்விக்கி மற்றும் ஸுமட்டோ நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்த கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரில் நேற்று [ஜூலை 14] முதல் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் இந்த கட்டணம் அமலுக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.

ஆன்லைன் பிளாட்பார்மில் இந்த டெலிவரி சர்வீஸ் பெறுவதால் அதற்கு தனி கட்டணத்தை இந்நிறுவனங்கள் கடந்த 2023 ஆண்டு அமல்படுத்தியது. டெலிவரி, ஜிஎஸ்டி போல் அல்லாது இந்த லாபம் நேரடியாக அந்நிறுவனங்களுக்கு செல்கிறது. இதற்கு முன்னரும் பல சமயங்களில் இந்த கட்டணம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
இதற்கு முன் குறைந்தபடச்சமாக ரூ.5 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆகியுள்ளது. இது ரூ.7 வரை விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது
- ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
- அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமாக இருக்கும் ஸ்விக்கியில் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2024 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் 22 வரைக்கும் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தாண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் ஸ்விக்கியில் குவிந்துள்ளன. சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 158 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹைதராபாத்தில் 97 லட்சம், பெங்களூருவில் 77 லட்சம், சென்னையில் 46 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தாண்டு ரம்ஜான் தினத்தன்று அதிகபட்சமாக 60 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
2024ல் ஸ்விக்கியில் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பட்டியலில் பிரியாணி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் பர்கர் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் 2.3 கோடி ஆர்டர்களுடன் தென்னிந்திய உணவான தோசை 2-ம் இடத்தை பிடித்துள்ளது னைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்விக்கியில் இந்திய அளவில் காலை உணவு ஆர்டர்களில் தென்னிந்திய உணவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதிகபட்சமாக காலை உணவுகளில் 85 லட்சம் தோசைகளும் 78 லட்சம் இட்லிகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டும் காலையில் அதிகபட்சமாக 25 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட Snacks வகைகளில் 24.8 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் ரோல் முதலிடத்தை பிடித்துள்ளது. 16.3 லட்சம் ஆர்டர்களுடன் மோமோஸ் 2ம் இடத்தில் உள்ளது. 13 லட்சம் ஆர்டர்களுடன் பொடேடோ ப்ரைஸ் 3-ம் இடத்தில் உள்ளது.
ஸ்விக்கியில் இந்தாண்டு மதிய உணவை விட இரவு உணவை தான் அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்கள் 196 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளனர். இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 533,000 முறை பயணம் செய்வதற்கு சமம் ஆகும்.
மும்பையை சேர்ந்த கபில் குமார் பாண்டே என்ற ஆண் டெலிவரி பார்ட்னர் இந்த ஆண்டு அதிகபட்சமாக 10,703 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார். அதேபோல் கோவையை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண் டெலிவரி பார்ட்னர் அதிகபட்சமாக 6,658 உணவு ஆர்டர்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது.
- ஆம்ஸ்ட்ராங் டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி, சுமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை.
பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது. சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்கும்படி டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டி.ஜி.பி.க்கும், ஸ்விகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.