என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freeze"

    • பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது
    • இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் வின்டோஸ் கணினி திரைகளில் நேற்று  தோன்றிய புளூ ஸ்க்ரீன் ஆப் டெத் Blue Screen of Death (BSOD) குளறுபடி  உலகம் முழுவதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மைகோரசாப்டை ஐ.டி நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியது. இதற்கு முக்கிய காரணம் CrowdStrike எனப்படும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மைக்ரோசாப்டில் செய்ய முயன்ற அப்டேட் ஆகும்.

     

    அமெரிக்கவைத் தலைமையிடமாக கொண்டு 2011 முதல் இயங்கி வரும் CrowdStrike சைபர் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமானது முன்னணி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள், விமான நிலையங்களின் சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும். சுருக்கமாக தனிநபர்கள் காஸ்பர்ஸ்கை, அவாஸ்ட் உள்ளிட்ட ஆட்டிவைரஸ்களை தங்களின் கணினியின் பாதுகாப்புக்காக நிறுவுவது போல், பெரு நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புக்காக CrowdStrike மென்பொருளை சார்ந்துள்ளது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் CrowdStrike மென்பொருளை உபயோகித்து வருகிறது.

    CrowdStrike மென்பொருளை கணினியில் இன்ஸ்ட்டால் செய்ததும் அது ஆட்டோமேட்டிக்காக வைரஸ் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளையும், ஆபத்துகளையும் ஸ்கேன் செய்யும். கணினியில் உள்ள மிகவும் நுட்பமான தகவல்களையும் அணுகுவதால், இந்த மென்பொருளில் ஏற்படும் சின்ன பிரச்சனையும் கணினிக்கும் எளிதாக பரவும். சோனி நிறுவனத்தை வட கோரிய ஹேக்கர்கள் ப்ரீச் செய்த விவகாரத்தை ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க ஜனநாயக கட்சியின் செர்வர்கள் ஹேக் செய்யப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்ட ரஷிய சைபர் நடவடிக்கைகளை ஆராய்ந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் CrowdStrike பணியாற்றியுள்ளது. 

     

    இந்நிலையில் தற்போது மைகோரஸாப்ட் விண்டோஸில் நடந்துள்ள இந்த சைபர் குளறுபடியாந்து  தங்களின் நிறுவனம் மென்பொருளில்  புதிதாக அறிமுகப்பபடுத்திய சாப்ட்வேர் அப்டேட் குளறுபடியானதால் ஏற்பட்டது என்று விளக்கம் CrowdStrike நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் manual ஆக மென்பொருளை ரீசெட் செய்து வருகிறோம் என்றும்   அந்நிறுவனத்தின்  தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி பரவலாக கூறப்படுவது போல் இது சைபர் தாக்குதல் கிடையாது என்றும் CrowdStrike சிஇஓ ஜார்ஜ் குர்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு வின்டோஸ் கணினிகளில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் பலர் புகாரளித்தனர்.
    • சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளம் Downdetector

    முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) திங்கட்கிழமை, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

    X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் X இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

    இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

    அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.  

    அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #USGovernmentShutdown #Trump
    வாஷிங்டன் :

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.

    இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அதோடு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

    இதனால் செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா, செனட் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற்ற முடியாமல் போனது.

    இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் அரசு துறைகள் முடக்கம் 2 வாரங்களை கடந்து நீடிக்கிறது.

    இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபையில் தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அதனை தொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள 2 செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

    இந்த மசோதாக்கள் மூலம் பிப்ரவரி 8-ந்தேதி வரை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கும், செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை மற்ற பல அரசுத்துறைகளுக்கும் தேவையான நிதித்தேவை பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    முதல் மசோதாவுக்கு ஆதரவாக 239 உறுப்பினர்களும், எதிராக 192 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதே போல் 2-வது மசோதாவுக்கு ஆதரவாக 241 ஓட்டுகளும், எதிராக 190 ஓட்டுகளும் பதிவாகின. இதனால் அந்த 2 மசோதாக்களும் பிரதிநிதிகள் சபையில் வெற்றிக்கரமாக நிறைவேறியது.

    இருந்த போதிலும் தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும்.

    அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே இந்த செலவின மசோதாக்கள் 2 சபைகளிலும் நிறைவேறினாலும் கூட தனக்குரிய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. #USGovernmentShutdown #Trump 
    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ×