search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friend murder"

    • பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கரூர்

    கரூர் தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள கம்பன் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவரது மகன் ஜீவா (வயது 20). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த வாரம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் சுந்தரவல்லி, தான்தோன்றி மலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திகிராமம் அருகே உள்ள இ.பி. காலனி பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் மாயமான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சசிகுமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ஜீவாவுக்கு மது வாங்கி கொடுத்து, கரூர் அருகில் உள்ள தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

    பின்னர், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஜீவாவின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அவரது உடல் 7 துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.

    பின்னர், போலீசார் முக்கிய குற்றவாளியான சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை வலை வீசி தேடுகின்றனர்.

    கைதான சசிகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    கரூர், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் நெருங்கிய நண்பன் நான். அவருடன் ஜீவாவுக்கும் பழக்கம் இருந்தது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.

    அதன் பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது ஜீவா அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததுவிட்டதாக கூறப்படுகிறது. என் நெருங்கிய நண்பரை கொன்று விட்டதால் அவர் மீது கோபம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜீவா எனது தலையை சிதைத்து விடுவேன் என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு அவன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் அவ்வப்போது கனவில் வந்து, என்னை கொலை செய்த ஜீவாவை இதுவரைக்கும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்றும், அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறியதாக சொன்னார். இதனால் அவனை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து காத்திருந்தோம்.

    கடந்த வாரம் விடுமுறையில் வந்த ஜீவாவை நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்து திட்டமிட்டபடி வெட்டி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×