search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gadkari"

    • நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம்.
    • அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

    சுயநலனுக்காக இந்திய அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சரன்சிங் தாகூரை ஆதரித்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    தேர்தல் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜ.க. கட்சி அரசியலமைப்பு மாற்றும் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

    அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படை உரிமைகளை யாராலும் மாற்ற முடியாது. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி அரசியலைமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பை சிதைத்த பாவத்தை செய்த காங்கிரஸ்தான் இப்போது நம் (பா.ஜ.க.) மீது குற்றம் சுமத்துகிறது.

    நீங்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினால் அது தலைவர்கள் கையில் இல்லை. மக்கள் கையில் உள்ளது. சாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது. மனிதன் ஜாதியால் பெரியவன் அல்ல அவனுடைய குணங்களால் மட்டுமே பெரியவன். தீண்டாமை, சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும்.

    நீங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறந்த நபரிடம் அவர்களின் சாதியைப் பார்க்காமல் செல்கிறீர்கள். நேர்மையான, ஊழலற்ற தலைவர்களையும், கட்சியையும் தேர்ந்தெடுக்கும் வரை உங்கள் எதிர்காலம் மாறாது

    இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

    பா.ஜ.க.வின் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய மந்திரி நிதின் கட்காரி பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தை சலிம் கானை நேரில் சந்தித்து பேசினார். #SalmanKhan #contactforsupport #NitinGadkari
    மும்பை:

    இந்தியாவில் உள்ள முன்னணி கட்சிகளில் ஒன்று பாரதீய ஜனதா கட்சி. நாட்டின் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. தனது 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பல தலைவர்கள் முக்கிய பிரமுகங்களை சந்தித்து பா.ஜ.க.வின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.


    இந்நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தையும், கதை ஆசிரியருமான சலிம் கான் ஆகியோரை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் தங்கள் நான்கு ஆண்டுகள் சாதனைகள் மற்றும் மோடி அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.

    இந்த பிரச்சாரம் ஆனது கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதன் படி கட்சி அமைப்புகள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பேரை சந்தித்து மோடி அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் ஒரு பகுதியாக அமித் ஷா இரண்டு நாள்களுக்கு முன்னர் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து பேசினார். #SalmanKhan #contactforsupport #NitinGadkari

    ×