என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Global Warming"
- 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
- புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.
வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.
புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.
சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.
படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன். இவர் இயற்கை பேரிடர் குறித்து கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கை சீற்றம் என்று பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809101407270511_1_Kerala-Heavy-Rain22._L_styvpf.jpg)
இத்தனை வசதிகள் இருந்தும் அவற்றை முறையாக பராமரிக்காதது தான், 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு காரணம். சென்னையில் வார்தா புயலின்போது வேரோடு சாய்ந்த மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு வகையை சார்ந்த மரங்கள். ஆனால் நமது நாட்டு மரங்களான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை.
குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ, பாறைகளை உடைக்கும் போது அல்லது குடையும் போது அந்த பாறையோடு இணைந்த உறுதியானது மண் பிணைப்பு நெகிழ்ந்து விடும். இது மழை காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும்.
நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும்.
புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயரும். இதனால் சென்னை நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
நாகை மாவட்டத்துக்கு இதனால் பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நில மட்டம் தாழ்ந்துவிடும். இதனால் கடல்நீர் எளிதில் உட்புகுந்து விடும். எனவே, இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைத்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #GlobalWarming