என் மலர்
நீங்கள் தேடியது "goods theft"
நெல்லிக்குப்பத்தில் 3 ஆட்டோக்களில் இருந்த ரூ.16 ஆயிரம் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜ், சோழவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி, வச்சீராந்த் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.
இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் இந்த 3 ஆட்டோக்களிலும் உள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த 2 செல்போன்கள், விலை உயர்ந்த 3 கைகடிகாரங்கள், மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலையில் கண்விழித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் ஆட்டோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரம்மதேசம் அருகே நள்ளிரவில் அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர்கள் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
மரக்காணம்:
பிரம்மதேசம் அருகே உள்ளது வேப்பேரி கிராமம். இங்குள்ள மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் வேப்பேரி, பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்த பின்னர் காவலாளி பள்ளியின் அனைத்து அறைக்கதவுகளையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் பள்ளி வளாகத்துக்கு வந்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தால் மாட்டி கொள்வோம் என்று எண்ணிய மர்ம மனிதர்கள் முதலில் வெளியே மாட்டியிருந்த எலக்ட்ரிக் பெல் மற்றும் பள்ளி மணி ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கம்ப்யூட்டர் அறை ஜன்னலின் கதவை வளைத்து லாவகமாக உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பென்டிரைவை கொள்ளையடித்தனர். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களோடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளின் வெளியே மாட்டியிருந்த பெல் மற்றும் அறையில் இருந்த பென்டிரைவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம மனிதர்கள் இவை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் தலைமை ஆசிரியர் ராதா புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரம்மதேசம் அருகே உள்ளது வேப்பேரி கிராமம். இங்குள்ள மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் வேப்பேரி, பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்த பின்னர் காவலாளி பள்ளியின் அனைத்து அறைக்கதவுகளையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் பள்ளி வளாகத்துக்கு வந்தனர்.
கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தால் மாட்டி கொள்வோம் என்று எண்ணிய மர்ம மனிதர்கள் முதலில் வெளியே மாட்டியிருந்த எலக்ட்ரிக் பெல் மற்றும் பள்ளி மணி ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கம்ப்யூட்டர் அறை ஜன்னலின் கதவை வளைத்து லாவகமாக உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பென்டிரைவை கொள்ளையடித்தனர். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களோடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளின் வெளியே மாட்டியிருந்த பெல் மற்றும் அறையில் இருந்த பென்டிரைவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம மனிதர்கள் இவை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் தலைமை ஆசிரியர் ராதா புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.