என் மலர்
நீங்கள் தேடியது "Gopi"
கோபி அருகே மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 28). கூலி தொழிலாளி.
நேற்று இரவு தண்டபாணி குள்ளம்பாளையத்தில் இருந்து முத்துக்காளிமடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குள்ளம் பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தண்டபாணி பரிதாபமாக இறந்தார். பலியான தண்டபாணிக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 28). கூலி தொழிலாளி.
நேற்று இரவு தண்டபாணி குள்ளம்பாளையத்தில் இருந்து முத்துக்காளிமடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குள்ளம் பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தண்டபாணி பரிதாபமாக இறந்தார். பலியான தண்டபாணிக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே முதியோர் இல்லத்தில் இருந்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் முதியோர் இல்லம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இல்லத்தில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.
பவானி பெரிய புலியூரை சேர்ந்த ரத்தினம் (வயது 60) என்பவரும் இங்கு தங்கி இருந்தார். நேற்று மதியம் அவர் வெளியே சென்றார்.
ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் மாயமானது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் முதியோர் இல்ல நிர்வாகி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரத்தினத்தை தேடி வருகிறார்கள். #Tamilnews
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் முதியோர் இல்லம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இல்லத்தில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.
பவானி பெரிய புலியூரை சேர்ந்த ரத்தினம் (வயது 60) என்பவரும் இங்கு தங்கி இருந்தார். நேற்று மதியம் அவர் வெளியே சென்றார்.
ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் மாயமானது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் முதியோர் இல்ல நிர்வாகி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரத்தினத்தை தேடி வருகிறார்கள். #Tamilnews