search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Medical"

    • சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
    • திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.

    இந்நிலையில், கல்லூரி விடுதியின் உள்ளே அறையில் நள்ளிரவு படித்துவிட்டு உறங்கிய மாணவர் காலையில் அறையை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பிறகு, சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்தபோது, சக்தி என்கிற மாணவர் படுத்த படுக்கையிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, மாணவர் சக்தியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மாணவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது இது தற்கொலையா என்பது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×