என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Green Festival"
- காரைக்குடியில் நடந்த பசுமை திருவிழாவில் மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
- 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் காரைக்குடி கிளை சார்பில் பசுமை திருவிழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி விழாவை தொடங்கி வைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், "பசுமை தமிழ்நாடு" இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.அதனடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொது மக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து அரசுடன் இணைந்து ஒருவார காலத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதே போன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமாித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பசுமை திருவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த வா்களை கலெக்டர் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவா்கள் சந்திர மோகன், குமரேசன், பாலாஜி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், கேசவன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்