என் மலர்
நீங்கள் தேடியது "GTvMI"
- முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
- அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்த தொடரின் முதல் வெற்றியை குஜராத் பதிவு செய்தது.
இப்போட்டி களிமண் ஆடுகளத்தில் நடத்தப்பட்டது குறித்து பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "மும்பை அணிக்கு எதிரான மோதலுக்கு களிமண் ஆடுகளத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகை கிரிக்கெட்டை அவர்கள் விளையாட விரும்பும் விதமும் அதில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
சிவப்பு மண் ஆடுகளத்தை விட களிமண் ஆடுகளம்தான் எங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும், எங்கள் அணியின் ஒட்டுமொத்த பலத்திற்கும் மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன.
போட்டிகள் செல்லும் விதத்தைப் பார்த்தால், 240 முதல் 250 ரன்கள் ஸ்கோர் செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். நாம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கவேண்டும். அப்போது தான் ஆட்டம் சமநிலையுடன் இருக்கும். எல்லா ஆட்டங்களும் 240 - 250 ரன்கள் அடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வளவு அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் இருந்தால், கிரிக்கெட்டின் திறமை பறிபோகும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2017 முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் நேற்றைய போட்டியில் முதல் முறையாக 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீசவில்லை.
20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ரஷித் கான் 4 ஓவர்களுக்கு குறைவாக பந்துவீசியது இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ரஷித் கான் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 160 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
- ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியின் 14வது ஓவரை சாய் கிஷோர் வீசினார். அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பிட்ச்சிற்கு இடையே வந்து முறைத்து கொண்டனர். உடனே நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார். பின்பு பாண்ட்யா போ என்பது போல சைகை செய்தார்.
பின்னர் போட்டி முடிந்ததும் மோதலை மறந்துவிட்டு சாய் கிஷோரை ஹர்திக் பாண்ட்யா கட்டியணித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
- குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது.
இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மும்பை அணி 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 6 தோல்வி பெற்று 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெளியேறுதல் சுற்றில் லக்னோவை தோற்கடித்தது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இது தொடர்பாக மும்பை அணியின் ஆல்ர வுண்டர் கேமரூன் கிரீன் கூறியதாவது:-
இத்தொடரை நாங்கள் மெதுவாக தொடங்கிேனாம். ஆனால் சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும். அந்த எழுச்சியை நாங்கள் பெற்று இருக்கிறோம்.
சூர்யகுமார் யாதவுடன் பேட்டிங் செய்வது எளிதான வேலை என்று நினைக் கிறேன். குஜராத் ஒரு கடினமான அணி. ஆனால் நாங்கள் எல்லா நம்பிக்கை யுடனும் அவர்களுடன் மோதுேவாம். அவர்களிடம் வலுவான செயல்திறன், விளையாட்டின் விரிவான அணுகுமுறை உள்ளது.
குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அற்புதமான வடிவத்தையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், நூர் அகமது செயல் திறனையும் பெற்று உள்ளனர்.
குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் இதுவரை 15 ஆட்டத்தில் 422 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- மும்பை அணியை பொறுத்தவரை அவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய பழைய பார்மை மீட்டு இருக்கிறார்கள்.
- பேட்டிங்கில் கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மும்பை - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த பிட்ச் மெதுவாக இருப்பதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
குஜராத் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. சேசிங்கில் குஜராத் அணி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கடந்த முறை சேசிங் செய்யும் போது குஜராத் அணி கடுமையாக தடுமாறியது. மேலும் சென்னை அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. அந்த அணியில் சுப்மன் கில்லை சுற்றி ஒட்டுமொத்த பொறுப்பும் இருக்கிறது.
கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் அவர்கள் நான்கில் வெற்றி பெற்று டாப் ஃபார்மில் இருக்கிறார்கள். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள், பில்டிங் என அனைத்துமே டாப் க்ளாஸில் இருக்கிறது. இதனால் கோப்பையை வெல்லப்போகும் அணி என்ற அந்தஸ்தையும் மும்பை அணி மீண்டும் பெற்று இருக்கிறது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டம் குஜராத்துக்கு கடும் போட்டியாக இருக்கும்.
எனினும், குஜராத் அணிக்கு இந்த நாக் அவுட் சுற்றில் ஒரு சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது குஜராத் அணி தங்களது சொந்த மண்ணான அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இது அவர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணியை பொறுத்தவரை அவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய பழைய பார்மை மீட்டு இருக்கிறார்கள். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் அந்த அணி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. மும்பை அணியானது சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்து தகுதி சுற்று-2-ல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆகாஷ் மத்வால் தனது வேகப்பந்து வீச்சால் மாயாஜாலம் செய்திருந்தார்.
3.3 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி லக்னோ அணியை வேரோடு சாய்க்க பெரிதும் உதவியிருந்தார் மத்வால். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாத நிலையில் 29 வயதான மத்வால், மும்பை அணியின் பந்து வீச்சு துறைக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளார்.
15 ஆட்டங்களில் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள சீனியர் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, 14 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரும் உறுதுணையாக செயல்படக்கூடும். கடந்த சில ஆட்டங்களாக அதிக ரன்களை விட்டுக்கொடுத்த கிறிஸ் ஜோர்டான், எலிமினேட்டர் ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டும் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
பார்முக்கு திரும்பி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும். பேட்டிங்கில் கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.
இந்த சீசனில் குஜராத் - மும்பை அணிகள் 3-வது முறையாக சந்திக்கின்றன. கடந்த ஏப்ரல் 25ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். இந்த ஆட்டத்தில் குஜராத் 207 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த தோல்விக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பதிலடிகொடுத்தது. சூர்யகுமார் சதம் விளாசிய அந்த ஆட்டத்தில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
- இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
- குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது.
ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்சும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:-
குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்
என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
- மும்பை அணிக்கு கடைசி ஐந்து ஓவரில் 43 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
- கைவசம் ஏழு விக்கெட் இருந்த நிலையில் தோல்வியை சந்தித்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியுடன் தொடர்ச்சியாக 12-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
ஐந்து ஓவர்களில் 42 நாட்கள் என்பது கடைசி நேரத்தில் மிகவும் குறைவு எனப் பார்க்கும் நாட்களில் இதுவும் ஒன்று. ஆனால் நாங்கள் எங்களுடைய வேகத்தை சற்று இழந்துவிட்டோம். அதனால் உண்மையிலேயே நாங்களாகவே சேஸிங்சில் இருந்து பின்வாங்கி விட்டோம்.
ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள். இந்த மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் சிறந்த சூழ்நிலையை உணர முடிவும். ரஷித்கான் ஓவரில் திலக் வர்மா ஒரு ரன் எடுக்க மறுத்தது, அந்த நேரத்தில் அவருக்கு அது சிறந்த யோசனையாக இருந்திருக்கும். அந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இது பெரிய விசயம் இல்லை. எங்களுக்கு இன்னும் 13 போட்டிகள் உள்ளன.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
வெற்றி குறித்து சுப்மன் கில் கூறுகையில் "எங்கள் அணி வீரர்கள் பதட்டத்தை கட்டுப்பிடித்திய விதம், பனிப்பொழிவு இருந்த போதிலும் கடைசி நான்கு ஓவர்களில் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பானது. பனிப்பொழிவு இருந்தபோதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய விதம், நாங்கள் தொடர்ந்து போட்டியில் வெற்றிக்காக இருக்கிறோம் என்பதை உறுதி செய்தார்கள். இது எல்லாம் நெருக்கடி கொடுப்பதாக அமைந்தது.
நெருக்கடியில் விளையாடி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மும்பை வீரர்ளுக்கு ஏற்படுத்த விரும்பினோம். அவர்களை நெருக்கடிக்குள் கொண்டு வந்து தவறு செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது" என்றார்.