என் மலர்
நீங்கள் தேடியது "Guyana"
- குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
- குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர்
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும், எனவே வாலை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரலாறு, கலாச்சாரத்தை அறிய நான் இங்கு வந்தேன்.
- முடிவுகள் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்.
மூன்று நாடுகள் பயணமாக கயானா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். முன்னதாக கயானாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற உரையில், பிரதமர் மோடி 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கொண்ட கயானா பயணம் குறித்தும் பேசினார்.
கயானா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது, "நேற்று, கயானா எனக்கு அதன் உயரிய மரியாதையை வழங்கியது. இந்த கவுரவத்திற்காக அனைத்து கயானிய மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், அதை இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்துக் கொள்கிறேன்."
"சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இந்தியர் கயானாவிற்கு வந்தார். அன்றிலிருந்து, நல்லது-கெட்டது, எல்லா சூழ்நிலைகளிலும், இந்தியா-கயானா உறவுகள் உள்ளன. 14 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த அழகான நாட்டிற்கு மிகுந்த ஆர்வம் கொண்ட நபராக வந்தேன். பொதுவாக, மக்கள் திகைப்பூட்டும் இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் கயானாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிய நான் இங்கு வந்தேன்."

"இன்று, 'முதலில் ஜனநாயகம், மனிதநேயம்' என்பதே நம்மை முன்னோக்கி நகர்த்துவதற்கான வலுவான மந்திரம். 'முதலில் ஜனநாயகம்' என்ற உணர்வு, அனைவரையும் அழைத்துச் செல்லவும், அனைவரின் வளர்ச்சியில் பங்கேற்க நமக்கு கற்றுக்கொடுக்கிறது. 'மனிதநேயம் முதலில்' என்ற உணர்வு நமது முடிவுகளின் திசையை தீர்மானிக்கிறது. 'மனிதநேயம் முதலில்' என்பது முடிவுகளின் அடிப்படையாக மாறும்போது, முடிவுகள் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும்."
"இந்தியாவும் கயானாவும் சுதந்திரம் அடைந்தபோது வெவ்வேறு சவால்கள் இருந்தன. இன்று, 21 ஆம் நூற்றாண்டில், உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, நாம் அனைவரும் ஒரு புதிய உலகை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், உலகம் மற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டது."
"முதலில் ஜனநாயகம், மனிதநேயம் என்ற உணர்வைப் பின்பற்றி, இன்று இந்தியா ஒரு விஸ்வ பந்துவாக உலகிற்கு தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறது. உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சனை எழும் போதெல்லாம், இந்தியாவே முதல் பதிலளிப்பவராக அடியெடுத்து வைக்கிறது. கொரோனா குழப்பத்தின் போது, ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முயன்றன. அந்த நேரத்தில், இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டது."
"நாங்கள் ஒருபோதும் விரிவாக்க உணர்வோடு முன்னேறவில்லை. வளங்களைக் கைப்பற்றுவது, வளங்களைப் பிடுங்குவது போன்ற மனப்பான்மையிலிருந்து நாம் எப்போதும் விலகியே இருக்கிறோம். இன்று இந்தியா எல்லா வகையிலும் உலக வளர்ச்சிக்கு ஆதரவாக நிற்கிறது, அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது. இந்த உணர்வுடன், இன்று இந்தியாவும் உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளது."
"இது உலகில் மோதல்களுக்கான நேரம் அல்ல, மோதலை உருவாக்கும் சூழ்நிலைகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நேரம். இன்று பயங்கரவாதம், போதைப்பொருள், சைபர் கிரைம் என எத்தனையோ சவால்கள் உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே நம் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்," என்று தெரிவித்தார்.
- கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
- சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஜார்ஜ் டவுன்:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.
கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தொடர்ந்து அங்குள்ள வகுப்பறைக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நடன பயிற்சியையும் பார்வையிட்டார்.
முன்னதாக, ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார்.
- சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஜார்ஜ் டவுன்:
பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.