search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "halitosis"

    • சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
    • வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

    ஹேலிடோஸிஸ்' என்று மருத்துவ மொழியில் சொல்லப்படும் வாய் துர்நாற்றம், வாய் ஆரோக்கியம், பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது தான், இந்த பிரச்சினைக்கான சிகிச்சையின் ஆரம்பமாகும்.

     காரணங்கள்:

    1) வெங்காயம், பூண்டு போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டவுடன், அவை ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள் வயிற்றில் இருக்கின்ற காலம் வரை, இந்த உணவுகளின் நாற்றம் சுவாசம் வழியாக வந்து கொண்டேதான் இருக்கும்.

    2) வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு இல்லாமை, சாப்பிட்ட பின்னர் பல் துலக்காமல், வாயை கொப்பளிக்காமல் இருப்பது, அவ்வப்பொழுது பல் டாக்டரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவைகளும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

    3) செயற்கை பல் செட் மாட்டி இருப்பவர்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் கிருமிகள் சேர்ந்து கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.

    4) வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவது, ஈறுகளில் சீழ்பிடித்து, வீங்கி நோய் ஏற்பட்டால், வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

    5) வாய் உலர்ந்து போதல், இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். மூக்கின் வழியாக சுவாசிக்காமல், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வாய் வழியாக சுவாசிப்பது இவைகளினால் ஏற்படலாம்.

    6) சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். நெஞ்சில், மூக்கில், சுவாசக்குழாயில் நாள்பட்ட சளி, சைனஸ் நோய் இருப்பவர்களுக்கும், ஜீரண மண்டல பிரச்சினை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

    சிகிச்சை என்ன?

    பற்கள், வாய், ஈறு, பற்காறை, பல்லில் கறை முதலிய பிரச்சினைகளினால் வாய் நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    சாப்பிட்ட பிறகு பற்களை துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது, நாக்கை சுத்தம் செய்வது நல்லது. தினமும் இருமுறை பல் துலக்கினால் கெட்ட பாக்டீரியாக்கள் சேர வாய்ப்பு இருக்காது. பல்செட் போட்டிருப்பவர்கள், அதை கழற்றி நன்றாகக் கழுவிய பின்னர் மறுபடியும் உபயோகியுங்கள்.

    சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறமாதிரி உள்ள புளிப்பு உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள் போன்றவைகளை கடித்து, மென்று சாப்பிடுங்கள்.

    தினமும் சிறிதளவு பச்சை புதினாக் கீரை, பச்சை கொத்தமல்லி தழை, மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குறையும்.

    நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிதளவு கிராம்பு, சீரகம், ஏலக்காய் இவைகளில் ஏதாவது ஒன்றினை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம்.

    மேலும் வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

    • பல் சொத்தையாகி எனாமல் தேய்ந்து போவது ஒரு காரணம்.
    • குழந்தைகளுக்கு புளூரைடு அதிகம் உள்ள பேஸ்ட்தான் நல்லது.

    மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல, அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம்.

    பல் கூச்சம் எதனால் வருகிறது?

    பல் சொத்தையாகி எனாமல் தேய்ந்து போவது ஒரு காரணம் தேய்ந்த பிரஷ்ஷால் அதிக நேரம் பல் தேய்ப்பதால் எனாமல் தேய்ந்தாலும், வயது அதிகம் ஆகும் போது பல் தேய்மானம் காரணமாகவும் பல் கூச்சம் வரும் மிருதுவான பிரஷ் பயன்படுத்த வேண்டும். பிரஷ் தேய்ந்து விட்டால் உடனே மாற்ற வேண்டும். பல் தேய்க்கும் போது மேலும் கீழுமாக மட்டுமே தேய்க்க வேண்டும்

    பற்களை பாதுகாக்க என்ன பேஸ்ட் பயன்படுத்தலாம்?

    பெரியவர்கள் எந்த பேஸ்ட் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு புளூரைடு அதிகம் உள்ள பேஸ்ட்தான் நல்லது அப்போதுதான் பல்லில் சொத்தை ஏற்படாது பற்கள் வளர்ச்சியில் பாதிப்பு வராது குழந்தைகளுக்கு என்று தனியாக புளூரைடு பேஸ்ட் கிடைக்கிறது.

    வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை தடுப்பது எப்படி?

    பல்லை சரியாக தேய்க்கவில்லை என்றால் வாயில் துர்நாற்றம் தான் வரும். சாப்பிட்ட பிறகு வாய்கொப்பளித்தால் மட்டும் சுத்தமாகாது. பிரஷ் பண்ணினால்தான் சுத்தமாகும். காலை, இரவு படுக்க போகும் முன் பல் தேய்ப்பது அவசியம். தவறினால், அது கால்சியமாக உருவாகி பற்களில் மஞ்சள் கறை படியும்.

    வயிற்றில் புண். நாள் பட்ட சளி இருந்தாலும் வாய் துர்நாற்றம் வரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் டாக்டரை பார்த்து செக்கப் செய்து கொள்வது அவசியம்.

    ஈறுகளில் வீக்கம் ஏன் வருகிறது?

    பற்களை சரியாக சுத்தம் செய்யாததால் பற்களின் இடையில் மஞ்சள் கறை படிந்து தொற்று ஏற்படும் போது ஈறுகளில் விக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் ரத்தக்கசிவும் ஏற்படும்.

    பல் சொத்தையாவதை தடுப்பது எப்படி?

    பற்களின் அமைப்பு மேடு பள்ளமாகதான் இருக்கும். அப்போது தான் சாப்பிடும் உணவு பொருட்கள் மெல்லும் போது அரைபடும். அப்போது அந்த பள்ளங்களில் உணவுகள் படிந்து இருக்கும். சாக்லெட் போன்ற இனிப்புகள் சாப்பிடும் போது பற்களின் இடையில் ஒட்டிக்கொள்ளும் அதை சரியாக பிரஷ் செய்யாமல் விடுவதால் கிருமிகள் உருவாகின்றன. குழந்தைகளில் பற்கள் விரைவில் சொத்தையாக இதுவே காரணம்.

    பற்களை பளிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது பற்களின் கவசமான எனாமல் பூச்சை பாதிக்கலாம். இந்த செயற்கை முயற்சிகள், பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மஞ்சள் நிறமும் ஆபத்துதான், செயற்கையான வெண்மை நிறமும் ஆபத்துதான்.

    ×