search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health foods"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும்.
    • பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    45 நாட்கள் கர்ப்பம் இருக்கும் போது போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருசிதைவு ஏற்படாமல் தடுக்கும். ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும். அவை நீரில் கரையக்கூடியவை ஆகும்.

    அதிக அளவு பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் ஃபோலிக்-அமில மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

    திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை என்றாலும் கருத்தரிப்பதற்கு முன்பில் இருந்து ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்த மருந்து உடலில் ரத்த அணுக்கள் சரியாக முதிர்ச்சியடையத் தவறிவிடுகின்ற (மெகாலோபிளாஸ்டிக் அனீமியா) என்கிற ஒரு குறிப்பிட்ட வகை ரத்த சோகையைத் தடுப்பதற்கும் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    உடல் குறைபாடுள்ள நிலையில் சோர்வினை போக்குவதற்கு ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. வாய்ப்புண், நோயால் ஏற்படும் வெளிறிய தோற்றம், தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோம்பல் ஆகியவற்றை குறைக்க ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுகிறது.

    கவனிக்க வேண்டியவை:

    ஆரோக்கியமான உணவு: கர்ப்ப கால பழங்கள் மற்றும் கர்ப்ப கால காய்கறிகளை தினமும் உணவுகளில் எடுத்துகொள்ளுங்கள். அவை கொஞ்சம் உங்களுக்கு மன உறுதியைத் தருவதோடு மட்டுமில்லாமல், உங்கள் சுவை மொட்டுகளையும் உங்களுள் இருக்கும் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

    தவிர்க்க வேண்டியவை:

    கர்ப்ப காலத்தில், சில உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    உணவுகளை நன்கு சமைப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் உண்மையில் நன்றாக இருக்கும். மிக குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    UTI அறிகுறிகளைக் கவனியுங்கள்

    சிறுநீர் கழிப்பதில் வலி ஏற்பட்டாலோ அல்லது நீங்கள் கழிவறை சென்றும் சிறுநீர் வரவில்லை என்றால், உங்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருக்கலாம். எனவே அப்படி இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சரிபார்க்கவும்.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருந்தால், உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கலாம். கர்ப்பத்தின் ஆறாவது வாரத்திற்குப் பிறகு, இந்த வகை தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    எனவே கர்ப்பம் உறுதி செய்தவுடன் அதற்கான உணவுமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வரப்போகும் குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்க்கையினை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    • டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும்.
    • பசலைக்கீரை ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

     பூண்டு

    பூண்டில் இருக்கும் அல்லிசின் திருமணமான ஒவ்வொரு ஆண்களுக்கும் அவசியமான ஒன்று. ஏனென்றால் இந்த பொருள் தான் ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு ரத்த ஓட்டட்தை அதிகரிக்க உதவுகிறது. இதுதான் பாலியல் வாழ்க்கைக்கு சிறப்பாக அமையும்.

    சாக்லேட்

    சாக்லேட்டி டோபமைன் உள்ளது. உடலில் டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும். மற்றும் அவர்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மன அழுத்தமின்றி இருப்பார்கள்.

    வாழைப்பழம்

    திருமணமான ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைக்கிறது. இது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாகவும், வலிமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. பாலுணர்வை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

    பசலைக்கீரை

    பசலைக்கீரையில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

    கடல்சிப்பிகள்

    கடல் சிப்பிகளில் துத்தநாகம் மற்றும் ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக் கூடியது. மேலும் கடல் சிப்பி உணவுகளும் காதல் ஹார்மோன்களை அதிகரிக்கக்கூடியவை.

    மாதுளை

    பழங்களில் மாதுளைப்பழம் எல்லோருக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றன. மேலும் மாதுளை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

    • உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள்.

    வயது அதிகரிக்கும் போது நமது உடல் பலவீனமாகத் தொடங்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். மேலும் பெண்களை விட ஆண்களுக்கே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளன.

    குறிப்பாக 30 வயது வரை வலிமையாக இருக்கும் நாம், 30 வயதை தாண்டியதுமே உடலில் பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்கிவிடுவோம். அதோடு அப்பிரச்சினையை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அது 40, 50 வயதுகளில் மீண்டும் தலைத்தூக்கி நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே ஆண்கள் 30 வயதை தொட்டுவிட்டால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். வாழ்நாளை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    பீன்ஸ்

    பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்சின் படி, 30 வயதுடைய ஆண்கள் குறைந்தது 40 கிராம் நார்ச்சத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்தானது மலச்சிக்கலைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

    கீரைகள்

    30 வயதை எட்டிவிட்டால், தினசரி உணவில் நற்பதமான கீரையை அவசியம் சேர்க்க வேண்டும். ஏனெனில் கீரைகளில் வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    செர்ரி பழங்கள்

    செர்ரிப் பழங்களிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவையும் 30 வயதிற்கு மேல் உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது வயதான காலத்தில் ஆண், பெண் என இருபாலரையும் தாக்கும் ஒரு எலும்பு தொடர்பான நிலையாகும். தற்போது இந்த பிரச்சனை 30 வயதிலேயே தொடங்கிவிடுவதால், இதைத் தவிர்க்க செர்ரி போன்ற பழங்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

    உருளைக்கிழங்கு

    நிறைய பேர் வயது அதிகரிக்கும் போது உருளைக்கிழங்கு உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு உருளைக்கிழங்கில் ஒரு வாழைப்பழத்தை விட இருமடங்கு அளவில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பிபி பிரச்சனை வரக்கூடாதெனில் உருளைக்கிழங்கை அவ்வப்போது உணவில் சேர்த்து வர வேண்டும்.

    காபி

    30 வயதை எட்டிய ஆண்கள் தினமும் 1.2 கப் காபி குடிப்பது நல்லது. இதனால் பலவகையான புற்றுநோய்கள், இதய நோய், டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் காபி உடலினுள் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் காபியைக் குடிக்கும் போது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கருப்பட்டி, வெல்லம் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

    தயிர்

    ஆய்வுகளின் படி, 25-30 வயதை எட்டிவிட்டால் எலும்புகளின் உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். எனவே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட கால்சியம் மற்றும் வைட்டமின் கே2 தயிரில் அதிகமாக உள்ளன. இவை எலும்புகளில் கால்சியத்தை படிய செய்து, எலும்புகளை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் தயிரை 3 வயதிற்கு மேல் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

    ×