என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heart Failure"

    • வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது.
    • பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.

    உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.

    அப்போது அதுசிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்க்கப் படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவீதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின்னர் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் அளவுகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.

    • சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
    • இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

    இதயத் துடிப்பு

    புகையிலையில் இருக்கும் முதன்மையான போதைப்பொருளான நிகோடின், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனான அட்ரினலின் செயல்பாட்டை தூண்டுவிடும். அதனால் புகைபிடித்த சில நொடிகளுக்குள் இதயத்துடிப்பு உடனடியாக அதிகரிக்க தொடங்கிவிடும்.

    ரத்த அழுத்தம்

    நிகோடின் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். இதனால் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    ஆக்சிஜன் குறையும்

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் குறுக்கிட்டு அதில் கடத்தப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கும். இதய தசை உள்பட செல்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

    ரத்த உறைவு

    புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரும்போது தமனிகளில் அடைப்பு உருவாவதை ஊக்குவிக்கும். இதனால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும். இதயம் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதன் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.

    இதய செயலிழப்பு

    புகைப்பழக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். ரத்த விநியோகத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கும்.
    • ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதயநோய் அபாயம்.

    மணிக்கணக்காக அமர்ந்து இருக்கிகிறீர்களா? அதிலும் வருகிறது ஆபத்து

    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து குறைந்த ஆற்றல் கொண்ட செயல்களைச் செய்பவர்கள் இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.


    அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களின் மாதிரியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்க தீவிரமான உடற்பயிற்சி போதுமானதாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் செலவிட்டால் இதய நோய் ஏற்படும் அபாயம் அப்படியே இருக்கும்.

    உட்காரும் நேரத்திற்கும் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.


    நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோயால் மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10.6 மணி நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதய செயலிழப்பு மற்றும் இதய நோயால் மரணம் ஏற்படும் அபாயம் 40 முதல் 60 சதவீதம் அதிகம்.

    எனவே பகலில் உட்காருவதைக் குறைத்து. அதிக நேரம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதிகமாக உட்காருவது ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்பல்லோ டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர், ஜெயலலிதா 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாக அளித்த புதிய தகவலால் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குழப்பம் அடைந்துள்ளது. #Jayalalithaa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர் நேற்று ஆஜரானார். அவர் 2016 செப்டம்பர் 26, 28-ந் தேதிகளில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அதன் பிறகு டிசம்பர் 4-ந் தேதி இறுதியாக பார்த்ததாகவும் தெரிவித்தார்.

    ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை, மரணம் சம்பவிக்கும் அளவுக்கு இதய நோய் பாதிப்பு இல்லை. எனவே அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழக்கும் முன் 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவர் மிகவும் அவதிப்பட்டார். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளித்தும் பலனின்றி அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தார் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது முந்தைய சாட்சிகளுக்கு நேர் எதிராக, முற்றிலும் புதிய தகவலாக உள்ளது. ஏற்கனவே சாட்சி அளித்தவர்கள் ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு முன் அவர் ஜெய் அனுமான் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தார் என்று கூறியிருந்தனர். இதனால் ஜெயலலிதா மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது உண்மையா? அல்லது நாடகம் பார்த்தது உண்மையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆணையத்தில் நேற்று சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர், ஆணையத்தில் நடக்கும் விசாரணை குறித்த தகவல்களை பேட்டி அளிக்க சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் வாதிட்டார். இதுகுறித்து ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

    சேலம், மேட்டூர் அணை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் லிங்கன் என்பவர் ஆணையத்தில் நேற்று ஆஜராகி, தான் சில சாட்சியங்களை அளிக்க விரும்புவதாகவும், ஜெயலலிதாவுடன் தான் தற்போதும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிக்கு முன்பு ஜெயலலிதா உங்களிடம் ஏதாவது பேசியிருந்தால் தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அவர் உங்களிடம் பேசுவதாக கூறுவதை ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையத்தில் ஆஜராகி சாட்சி அளிக்கிறார்.  #Jayalalithaa #ArumugasamyCommission
    ×