என் மலர்
நீங்கள் தேடியது "heart problem"
- பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
- இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.
1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்
2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்
3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.
மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.
இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:
1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,
2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,
3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,
4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,
5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,
6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,
7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- CPR பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
- மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும்.
இதய பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் சர்வ சாதாரணமாக வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. தவறான பழக்கவழக்கங்கள், முறையில்லாத உணவுமுறை மற்றும் உடல் உழைப்பு இல்லாத வேலை, உடல் பருமன், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில் இதயம் தொடர்பான பிரச்சனையில் ஒன்று திடீரென்று இதயம் செயல்படுவது நின்று போவது. இவ்வாறு இதயம் செயல்படுவதில் திடீரென்று தடை ஏற்படுவது CPR எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை மூளையின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது. இதனை அறிந்துகொள்வது மிகவும் எளிமையான செயல்முறையாகும்.
முதலில் நோயாளியை ஒரு சமமான மேற்பரப்பில் படுக்க வைத்து உங்கள் இரு கைகளையும் மார்பின் மையத்தில் வைத்து வழக்கமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும். ஒவ்வொரு அழுத்தத்திற்கும் பிறகு மார்பு இயல்பு நிலைக்கு சில நொடிகள் இடைவெளி கொடுக்க வேண்டும். இதன் பின்னர் வாயோடு வாய் வைத்து CPR பயிற்சியை மேற்கொள்ளலாம்.
நாம் CPR பயிற்சியை சரியாக கொடுத்தால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கைகளை ஒன்றன் மீது ஒன்றாக இருக்குமாறு வைத்து விரல்களுக்குள் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மார்பின் மையத்தில் கைகள் வைக்கப்படும் அதே வேளையில் உங்களுடைய தோள்பட்டை கைகளுக்கு நேராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கைகளுக்கு சரியான அழுத்தம் கிடைக்காது.
CPR பயிற்சியின் போது மூச்சுக்காற்றை உட்செலுத்தும் நிலை வந்தால் நோயாளியின் தலையை ஒரு கையில் பின்னால் சாய்த்து பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கன்னத்தை உயர்த்தி பிடித்துக் கொள்ள வேண்டும். இது நுரையீரலுக்கான காற்றுப்பாதை திறந்திருப்பதை உறுதி செய்கிறது. நீங்கள் 30 முறை மார்பில் அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்றால் மூச்சுக்காற்றை உட்செலுத்துவது 2 முறை பண்ணலாம்.
BLS பயிற்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், டிராபிக் போலீஸ், தீயணைப்பு படையினர் என அனைவருக்கும் விழிப்புணர்வாக மருத்துவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
கேரளாவின் வட எல்லையில் உள்ள நகரம் காசர்கோடு.
காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சானியா-மித்தா. இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காசர்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று குழந்தையின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி டாக்டர்கள், குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர்.
மேலும் இந்த தகவல் கேரள அரசின் குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர்கள் இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மின்னல் வேகத்தில் வந்தாலும் கூட 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தையின் உயிரை பாதுகாப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மந்திரி சைலஜா ஏற்பாடு செய்தார். குழந்தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
காசர்கோட்டில் இருந்து கொச்சி 400 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலை. இதில் ஆம்புலன்சில் வந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
குழந்தையை காப்பாற்றவும், குழந்தையை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விடவும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகளும், மந்திரி சைலஜாவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியாக வைரலாக பரவியது. காசர்கோட்டில் குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்சிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் மந்திரியின் ஏற்பாட்டால் காசர்கோட்டில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்சு 400 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து கொச்சி அமிர்தா ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.
அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, குழந்தையின் உடல்நிலை குறித்து 24 மணி முதல் 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும். நாங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம் என்றனர்.
கேரள மந்திரியின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே கேரள மக்களின் விருப்பம். கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. #KeralaHealthMinister

‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.
‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
இதுகுறித்து பிரசாந்த், சிறப்பு மருத்துவ மனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:-
இதய நோய், பக்க வாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.
ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ் டிரால், எல்டிஎல் கொலஸ் டிரால் அளவு அதிகமாகும். மேலும் குடும்ப பரம்பரை காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. நிகோடின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்தச் செய்கிறது.
நெஞ்சுவலி அல்லது அசவுகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழங்கை, மணிக்கட்டில் அசவுகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.
சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையைசரியாக பராமரித்தல் போன்றவை இதயநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனிதனின் உயிர்நாடி இதயம். நம் உடலில் அனைத்து உறுப்புகளை விடவும் இது அதி முக்கியத்துவம் வாய்ந்தது; அற்புதமானது.
இதயம் விரிந்து சுருங்கி எப்போதும் இடைவிடாது, தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 தடவை சுருங்கி விரியும் பணி நடைபெறுகிறது. நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. மரபுப் பண்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல், புகையிலைப் பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள், ரத்த மிகை கொழுப்பு போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
மாரடைப்பு வராமல் தடுக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.
உலக இதய நாளையொட்டி இந்த ஆண்டும் வழக்கம் போல் ‘லட்சியக்கருவை’ உலக இதய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், புகையிலைப் பழக்கத்தை அறவே விட வேண்டும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள உரக்க வலியுறுத்துகிறது.
உலகில் உள்ள எல்லா மனிதர்களும் வாரத்தில் 150 நிமிடங்கள் நடுநிலையான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. உலகில் உள்ள 25 சதவீத மக்கள் இந்த இலக்கை எட்டவில்லை.
இந்திய மனிதர்களில் 34 சதவீதமும் குறிப்பாக இந்தியப் பெண்களில் 40 சதவீதமும் அடிப்படை உடற்பயிற்சி கூட செய்வதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
இந்திய மக்கள் உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்தாதவரை இதய நோய்கள் அதிகமாகும் போக்கை தடுத்து நிறுத்த முடியாது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் இளம் வயதிலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்து பணிபுரியும் நிலை அதிகமாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் மட்டுமல்ல, அலுவலகங்களில் கம்ப் யூட்டர்களில் பணிபுரியும் அலுவலர்கள் கார், பஸ், லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள் அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணிபுரிகிறார்கள்.
எனவே இவர்கள் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக மருத்துவ உலகம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. இதனால் தொடர்ந்து உட்காருவதை தவிர்த்து 60, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடங்கள் நடப்பது நலம்.
உணவுப் பழக்கத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 2015-20-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் சுகாதார இலாகா வகுத்துள்ளது. முன்பு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் வரை கொலஸ்ட்ரால் பொருட்களை உண்ணலாம் என்று வரையறை வைத்திருந்தனர்.
கொலஸ்ட்ரால் உணவைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் மாவுச்சத்து (கார்போ ஹைடிரேட்) பொருட்களை அதிகம் சாப்பிட்டு அது தொடர்பான பிரச்சினை அதிகரித்து வருவது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இதனால் அந்த வரையறை நீக்கப்பட்டது. இதனால் மாவுச்சத்து என்பது ஒரு புதிய கொழுப்பு என்ற நிலைப்பாடு நிலவுகிறது. இதனால் சரிவிகித உணவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி காய்கறி, பழங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, மீன் வகைகள் போன்றவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ராலுக்கு அளிக்கப்பட்ட வரையறை நீக்கப்பட்டது, இதய நோய் வராதவர்களுக்கான சிபாரிசு. ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ராலை நன்றாகக் குறைக்க வேண்டும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இதய நோய் குறித்து இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த இதய தினத்தை முன்னிட்டு மேற்கூறப்பட்ட மூன்று உறுதிமொழிகளை மேற்கொண்டு அதன்படி செயல்பட்டால் வரும் ஆண்டுகளில் இதய நோய் வராமல் தடுக்க முடியும். உறுதிமொழி ஏற்போம்! இதயம் காப்போம்!
டாக்டர் ரிபாய் சவுக்கத் அலி,
இதய நோய் சிகிச்சை நிபுணர்
தொண்டையில் தொற்று ஏற்பட்டவுடன் தண்ணீரில் உப்பைக் கலந்து வாய் கொப்பளித்தல், குளிர்பானங்களைத் தவிர்த்தல் போதும் என்றெல்லாம் இருப்பது வழக்கம். தொண்டை கரகரப்பு, காய்ச்சல் தானே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்ற அலட்சியப் போக்கு இயல்பாகவே நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் தொண்டை நோய்த்தொற்று இருதயச் செயல்பாட்டைப் பாதிக்கும் என்ற அதிர்ச்சிகரமான செய்தி, பலருக்கும் தெரியாது.
இருதய பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாகச் செல்லாததாலேயே மயக்கம் ஏற்படுகிறது. இருதய வால்வில் ஒரே வழியாகச் சென்று வர வேண்டிய ரத்தமானது, இரு வழியாகச் சென்று வரத் தொடங்கும். மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் இருதயத்திலேயே தங்கிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த அதிகப்படியான ரத்தத்தைத் தாங்குவதற்காக இருதயம் விரிவடைய தொடங்குகிறது. ஒரு தொண்டை நோய்த்தொற்று இருதயத்தை இப்படியும் பாதிக்குமா? ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும், தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ- மாணவிகளிடம் இந்நோய்த்தொற்று விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.
உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதும் ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. இறுதியில் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. தினமும் 2.3 கிராம் சோடியம்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நாம் இரண்டு மடங்குக்கு அதிகமான உப்பை உணவில் பயன்படுத்துகிறோம். சமீபகாலமாக இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 17 மில்லியன் மக்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 23 மில்லியன் ஆக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்.