என் மலர்
நீங்கள் தேடியது "Hero MotoCorp"
- யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார்சைக்கிள் உருவாக்குவதை ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புது இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் மோட்டார்சைக்கிள் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றியுடம் தகவல் வெளியிட்டு உள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பிரீமியம் பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் நிரன்ஜன் குப்தா முதலீட்டாளர் கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து புது பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் புது மோட்டார்சைக்கிள் மிடில்வெயிட் பிரிவில், 350சிசி திறன் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. புது மாடல் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லியின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவை கவனித்து வருகிறது. மேலும் நாடு முழுக்க டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 300S மற்றும் எக்ஸ்-பல்ஸ் 400 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என நிரன்ஜன் தெரிவித்தார்.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
- ஹீரோ வாகனங்கள் விலை குறிப்பிட்ட தேதியில் இருந்து மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
"உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், அவர்களுக்கு நிதி சலுகை மூலம் தீர்வுகளை வழங்குவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்து இருக்கிறார்.
விலை உயர்வு தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு விட்டன. எனினும், இதற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அடுத்த மாத வாக்கில் இந்த மாடல் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விலை உயர்த்தப்பட்டன.
- இரு ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது.
எனினும், தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை. பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விலை உயர்வின் படி ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என மாறி இருக்கிறது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய விலை விவரங்கள்:
ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982
ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738
ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228
ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
விலையை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகளை அறிவித்து இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் ஏராள மாற்றங்கள் செய்யப்படுகிறது.
- இந்த மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படுவதோடு, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளின் புது டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதற்கான டீசர்கள் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளுக்கான புது டீசரில் முன்புற தோற்றம் அம்பலமாகி இருக்கிறது. அந்த வகையில் புது மாடல் மீண்டும் மேம்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் ஸ்டைலிங் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. எனினும், இதன் ஹெட்லேம்ப் பொசிஷண் மாற்றப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பாடி நிறத்தால் ஆன ஃபிளை ஸ்கிரீன், ரிடிசைன் செய்யப்பட்ட பெல்லி பேன் வழங்கப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்படலாம். புதிய எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் 199.6சிசி சிங்கில் சிலிண்டர், ஆயில்/ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 18.8 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் வழங்கப்பட்டு இருந்த இரண்டு வால்வுகள் கொண்ட வேரியண்ட் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்திவிட்டது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 200சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது மாடலின் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200T 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் மெக்கானிக்கல், காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை முந்தைய வெர்ஷனை விட சிறிதளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
டிசைனை பொருத்தவரை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல் தற்போது ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் முன்புற ஃபோர்க்குகள், எல்இடி ஹெட்லைட்டின் மேல் சிறிய ஃபிளைஸ்கிரீன், பாடி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ஹெட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் பின்புற டெயில் ரேக் மீது டியுபுலர் கிராப் ரெயில் உள்ளது. இதன் அலாய் டிசைன், ஸ்கூப்டு சீட் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புது மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக சற்றே சக்திவாய்ந்த 200சிசி, சிங்கில் சிலிண்டர் ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 வால்வுகளுக்கு பதில் 4 வால்வுகள் கொண்ட செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 18.83 ஹெச்பி பவர், 17.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கால் அலெர்ட்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்டாண்டு சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரு வீல்களிலும் ஒற்றை டிஸ்க் மற்றும் அலாய் வீல் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 726, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2V மாடலின் விலையை விட ரூ. 1036 அதிகம் ஆகும். புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல்- ஸ்போர்ட்ஸ் ரெட், மேட் ஃபன்க் லைம் எல்லோ மற்றும் மேட் ஷீல்டு கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்திய சந்தையில் விடா பிராண்டின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முதற்கட்டமாக விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பெங்களூரு நகரில் துவங்கி இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதற்கட்டமாக பெங்களூரு நகரில் வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விடா V1 வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இதன் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன.
இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xoom 110 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புதிய ஹீரோ Xoom 110 ஸ்கூட்டரின் முன்பதிவு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடலின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் LX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹீரோ Xoom 110 விலை விவரங்கள்:
ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999
ஹீரோ Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799
ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 68 ஆயிரத்து 625 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பிற்கு இந்த ஸ்கூட்டரில் இண்டகிரேட் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், ஹீரோ லிங்கோ கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் கார்னர் பெண்ட் லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர், போன் பேட்டரி ஸ்டேட்டஸ், கால்/எஸ்எம்எஸ் அலெர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹீரோ Xoom 110 அண்டர்சீட் ஸ்டோரேஜில் எல்இடி லைட், ஓபன் குளோவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஃபியூவல் ஃபில்லர் கேப் வழங்கப்படவில்லை. மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Xoom ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- புதிய ஹீரோ Xoom ஸ்கூட்டரின் விலை ரூ. 68 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 110சிசி ஸ்கூட்டர் Xoom முன்பதிவை துவங்கி இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ Xoom வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹீரோ Xoom மாடல்- LX, VX மற்றும் ZX என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் LX விலை ரூ. 68 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை விவரங்கள்:
ஹீரோ Xoom LX ரூ. 68 ஆயிரத்து 999 என்றும் Xoom VX ரூ. 71 ஆயிரத்து 799 என்றும் ஹீரோ Xoom ZX ரூ. 76 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.

முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல், H வடிவ எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹீரோ Xoom 110 மாடலிலும் 110.9சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
- புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஹீரோ கூட்டணி அமைக்கிறது.
இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜீரோ நிறுவனம் பவர்டிரெயின்களை உருவாக்குகிறது. உற்பத்தி, உதிரிபாகங்கள் மற்றும் விளம்பர பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொள்ள இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக குழு ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 491 கோடியை முதலீடு செய்ய அனுமதி அளித்தது.

எனினும், இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் வாகனங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சர்வதேச வலைத்தளத்தில் ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மாடல்களை பட்டியலிட்டுள்ளது. இவற்றில் ரோட்ஸ்டர், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் பிரிவு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வினியோகம் செய்யும் பணிகளை துவங்கிவிட்டது. இதுதவிர பொது சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் சார்ஜிங் சேவைகள் பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுகிறது.
தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஜெய்பூர் நகரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயிண்ட்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு இருக்கிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா பைக் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்து வந்தது.
- புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய கரிஸ்மா மாடலின் மூலம் பாரம்பரியம் மிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டு அவதாரத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை கரிஸ்மா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய எஞ்சின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பிரீமியம் பிரிவில் களமிறங்கி போட்டியை ஏற்படுத்த செய்யும் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மை ஹீரோ நிறுவனம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பழைய கரிஸ்மா மாடலில் 223சிசி, ஏர் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் 20 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்தது.
புதிய ஹீரோ கரிஸ்மா மாடலில் 210சிசி, லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 25 ஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
புதிய தலைமுறை கரிஸ்மா மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது. கரிஸ்மா பிராண்டு ஹீரோ நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஒன்றாகவும், அதிக பிரீமியம் மாடலாகவும் இருந்து வந்தது. ஹீரோ நிறுவனத்திற்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த மாடலாக கரிஸ்மா விளங்கியது.
எனினும், 2014 வாக்கில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து மெல்ல இந்த மாடலின் விற்பனை குறையத் தொடங்கியது. காலப்போக்கில் இதன் விற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய மோட்டார்சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
புதிய கரிஸ்மா மாடலின் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் பிரிவில் அதிக பங்குகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் மாடல் மட்டுமே விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எக்ஸ்பல்ஸ் 200S மாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்திய சந்தையில் புதிய கரிஸ்மா மாடல் முற்றிலும் புதிய பல்சர் 250s, ஜிக்சர் 250s மற்றும் டாமினர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மூன்று நகரங்களில் கிடைக்கிறது.
- மூன்று நகரங்களைத் தொடர்ந்து ஹீரோ விடா V1 சென்னையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதற்கட்டமாக பெங்களூரு, ஜெய்பூர் மற்றும் டெல்லி என மூன்று நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வந்தது. மூன்று நகரங்களை தொடர்ந்து ஹீரோ விடா V1 சென்னையில் விற்பனைக்கு வர இருக்கிறது. சென்னையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு தவிர, இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் வினியோக விவரங்கள் பற்றி ஹீரோ நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பெங்களூருவில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலோ ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளஸ் மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இவற்றில் ப்ரோ வேரியண்ட் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதோடு, நீண்ட ரேஞ்ச், சிறப்பான அக்செல்லரேஷன் மற்றும் அதிக நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலும் எட்டிவிடும். இதோடு ப்ரோ மாடலில் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்டில் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.
ஹீரோ விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர்களில்: இகோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் பயனர் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகை என மொத்தம் நான்கு ரைட் மோட்கள் உள்ளன.