என் மலர்
நீங்கள் தேடியது "hindi language"
- ஆங்கில எழுத்தால் ‘சகயோக்’ எனவும், தமிழ் எழுத்தால் ‘சகயோக்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
- எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் ‘சகயோக்’ என்றுதான் வாசிக்க முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப்பலகையில் இந்தி எழுத்தால் 'சகயோக்' என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் 'இன்பர்மேசன் சென்டர்' என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் 'சகயோக்' எனவும் தமிழில் 'சேவை மையம்' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் 'சகயோக்' என்றும் எழுதப்பட்டுள்ளது.
இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் 'சகயோக்' என்றுதான் வாசிக்க முடியும்.
இதே போன்று இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் என்ன? தமிழ் மறைப்பா? இந்தி திணிப்பா? யாருக்கும் புரியவில்லை. பயணிகள் குழம்பி போய் நிற்கிறார்கள்.
- ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.
- இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் தமிழுக்கு பதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலம், தமிழிலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.
இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை இன்று கிழித்து அகற்றினர்.
- நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் பரவியது.
- அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை.
டெல்லியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டத்தில், இந்தியில் வழங்கப்பட்ட நிதிஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்க்க கோரினார் டி.ஆர்.பாலு. அதற்கு, "இந்தி நம் தேசிய மொழி; அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.
"இந்தியாவை இந்துஸ்தான் என்று அழைக்கிறோம். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி. இந்தி மொழி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார். இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்திய நாட்டை இந்துஸ்தான் என்று அழைப்பதற்கு காரணமுண்டு. இந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம். அதேநேரம், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டுள்ளன. பேசும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தி இந்தியாவின் "தேசிய" மொழி அல்ல, ஆனால் ஒரு "அதிகாரப்பூர்வ" மொழி. இந்தியாவில் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இதேபோன்று, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும். மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணிப்பது இருக்க கூடாது.
எனவே, இந்தி தேசிய மொழி, அதனை தெரிந்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற தொனியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தால் அது ஏற்புடையதல்ல. காரணம், இந்தி தேசிய மொழி அல்ல. அதேநேரம், ஒரு மொழியை கற்பது, தெரிந்துவைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.
அந்த வகையில், இந்தியை திணிப்பதுதான் தவறு... விருப்பப்பட்டு கற்பது என்பது ஏற்புடையதே...
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை.
- இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் 'இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பதை தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த பெயர் பலகையில் இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை கருப்பு மையால் அளித்துவிட்டு தமிழ் வாழ்க என அந்த பெயர் பலகையில் எழுதினர்.
இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி ரெயில் நிலையத்தில் யாரும் புகுந்து விடாமல் இருப்பதற்காக மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையத்தில் 2 கட்டிட நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்ட நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு என எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
- ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.
மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று எச். ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எச். ராஜா பேசியது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை" என்று தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது.
- 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.
மேலும், இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.