என் மலர்
நீங்கள் தேடியது "hostage"
- கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
- அப்போது அங்கு ஆயுதங்களுடன் நுழைந்தவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
- கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.போலீசார் விரைந்து வந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் 4-வது நபரும் பத்திரமாக வெளியே வந்தார். இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறும்போது, கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பயங்கரவாத நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
- இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்றன.
ஜெருசலேம்:
பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகக் கடத்திச்சென்றது. அவர்களில் பலர் வெளிநாட்டினர்.
இதைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
இதனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் மேலும் ஒருவரை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது.
இதுவரை 8 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் வசம் 100-க்கு மேற்பட்ட பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அதில் பலர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.
போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அதற்கு பிந்தைய வழிமுறைகள் குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன்படி,பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவால் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடைசி நிமிட சலுகைகளை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை குற்றம் சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.
"பிரதமர் அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவையை கூட்ட உத்தரவிட்டார். பின்னர் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அரசாங்கம் கூடும்," என்று நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளின் குடும்பங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் திரும்பியதும் அவர்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அது மேலும் கூறியது.
இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதைத் தொடர்ந்து பாலஸ்தீன கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, போருக்கு நிரந்தர முடிவுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.
போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் அமெரிக்கா கடந்த புதன் கிழமை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.
போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.
அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், அதை இஸ்ரேல் சகித்துக் கொள்ளாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலை பெறும் வரை நாங்கள் கட்டமைப்பை நோக்கி முன்னேற முடியாது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதிமீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே பொறுப்பு. தேவைப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவோடு போரை மீண்டும் துவங்க எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
- முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
- போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.
போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாக சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.
அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.
அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருந்தது. இந்த நிலையில், பண்யக்கைதிகளின் பட்டியலை வழங்கும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் விடுவிக்கப்படும் பயணக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணக்கைதிகளின் பட்டியலை தரும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணக்கைதிகளின் பட்டியல் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுகாதாரம், சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்பட்டது.
- இதுவரை இரு கட்டமாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
- இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதுவரை இரு கட்டமாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும் விடுவிக்கப்பட உள்ள 8 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்டது. இவர்கள் இன்று விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், இந்த வாரம் இரு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட பிணைக்கைதிகள் 11 பேர் விடுவிக்கப்படுவர். ஹமாஸ் இதுவரை 7 பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக கைதிகள் 290 பேர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.
ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையம் மூடப்பட்டது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். #Germany #Hostage
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பார்வையாளர்கள் எடுத்து வரும் வெளி உணவுகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். இதற்கு சிறைக்கைதிகள் சிலர் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து, போலீஸ் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிறைக்கைதிகள் கூட்டாக சேர்ந்து 5 போலீஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளனர். மேலும், ஒரு போலீஸ் அதிகாரியை பிணைக்கைதியாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் கைதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை மோதலை கட்டுப்படுத்த இந்தோனேஷிய போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் மோதலால் வெளியாட்கள் யாரும் சிறைச்சாலை அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #KilledFivePolice #Hostage #JailClash