என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

    காசா பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இது அதற்கு முந்தைய தாக்குதலில் பதிவான உயிரிழப்புகளை விட அதிகம் ஆகும். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் தினமும் உயிரிழந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் நடத்தும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் கடந்த ஒருவார காலத்திற்குள் காசா பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 17 மாதங்களில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தொடர் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரு்ம நிலையில், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு எகிப்து யோசனை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர் உள்பட ஐந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் காசா பகுதிக்குள் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை அனுமதித்து, ஒருவார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று எகிப்து அதிகாரி தெரிவித்தார்.

    இதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பணயக்கைதிகள் விடுவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு சாதகமான பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், காசாவில் உள்ள ரெட் கிராஸ் அலுவலகத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    • சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
    • ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு காசாவில் அமைந்துள்ள மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர்- ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிப்பின் நீண்டகால பயங்கரவாதத்தை தொடரும் வகையில் உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்த குற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை செய்யும் தொடர்ச்சியான கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது," என தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
    • ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    தெற்கத்திய காசா எல்லையில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    ஹவுதிக்கள் ஏவிய ஏவுகணையை இடைநிறுத்தம் செய்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தெற்கத்திய காசா பகுதிகளில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு 17 உடல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என ஐரோப்பிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு தாக்குதலில் உயிரிழந்த பெண் மற்றும் குழந்தையின் உடல் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதாக குவைத் மருத்துவமனை தெரிவித்தது.

    இதேபோல் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் மற்றும் அவரது மனைவி தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடந்த வாரம் முடிவுக்கு கொண்டு வந்து, திடீரென கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    • காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
    • இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.

    இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.

    • தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. மறுப்பக்கம் ஏமனை சேர்ந்த ஹவுதிக்களும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

    நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் 400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதாகவோ அல்லது பிற தாக்குதல்களை நடத்தியதாகவோ எந்த அறிக்கையும் இல்லை. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த தாக்குதல்களில் ஒன்று, இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலுள்ள அபாசன் அல்-கபிராவில் வசித்து வந்த அபு டாக்கா குடும்பத்தின் வீட்டைத் தாக்கியது.

    இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதனை அந்த பகுதியின் அருகில் இயங்கி வரும் ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    • பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    • சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    ஏமன் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் சைரன்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே பலமுறை வெடி சத்தங்கள் கேட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, இந்த வாரம் ஏமனின் ஹவுதி குழு மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி தாக்குதலின் போது மத்திய இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் தரப்பில் காசா பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தாழ்வாதார பகுதி ஒன்றை கைப்பற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ள டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவித்து பிரதேசத்தின் கட்டுப்பாட்டை கைவிடும் வரை தாக்குதல்கள் தீவிரமடையும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிக்கும் நெட்சாரிம் தாழ்வாரத்தின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

    நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் சபை காசாவில் தனது ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் கூறியது. தாக்குதலுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    • காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
    • இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் 56,000 பேர் உயிரிழந்த பின் கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1 உடன் முடிவுக்கு வந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்றுய காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 400 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹவுதிக்கள் ஏவுகணைகத் தாக்குதல் நடத்தினர்.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக ஹவிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

    அந்த ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் காசாவுக்கு ஆதாரவாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் பலமுறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதிக்களை ஒடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவின் கடுமையாக போராடி வருகிறது.

    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது, விரிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே, காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விரிவடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர வான்வழி தாக்குதல்களில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 326 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்ததை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், விரிவடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிழக்கு காசா, வடக்கில் உள்ள பெய்ட் ஹனவுன் நகரம் மற்றும் தெற்கில் உள்ள இதர சமூகங்கள் என அனைவரையும் அந்தந்த பகுதிகளில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என்று தெரிகிறது.

    "இஸ்ரேல் இனிமேல், அதிகரித்த இராணுவ வலிமையுடன் ஹமாஸுக்கு எதிராக செயல்படும்" என்று பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
    • இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

    போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
    • ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.

    இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    ×