search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி - கேரளாவை சேர்ந்தவர் சுட்டு கொலை
    X

    இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி - கேரளாவை சேர்ந்தவர் சுட்டு கொலை

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×