என் மலர்tooltip icon

    உலகம்

    முதலில் ஏவுகணை தாக்குதல், ஒலியெழுப்பும் சைரன்கள்.. மீண்டும் தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்
    X

    முதலில் ஏவுகணை தாக்குதல், ஒலியெழுப்பும் சைரன்கள்.. மீண்டும் தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்

    • பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    • சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    ஏமன் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் சைரன்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே பலமுறை வெடி சத்தங்கள் கேட்டன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, இந்த வாரம் ஏமனின் ஹவுதி குழு மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி தாக்குதலின் போது மத்திய இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் தரப்பில் காசா பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தாழ்வாதார பகுதி ஒன்றை கைப்பற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ள டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவித்து பிரதேசத்தின் கட்டுப்பாட்டை கைவிடும் வரை தாக்குதல்கள் தீவிரமடையும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    வடக்கு காசாவை தெற்கில் இருந்து பிரிக்கும் நெட்சாரிம் தாழ்வாரத்தின் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

    நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் சபை காசாவில் தனது ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், விருந்தினர் மாளிகையில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் கூறியது. தாக்குதலுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×