என் மலர்
நீங்கள் தேடியது "house window"
நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
கோவில்பட்டி புதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியுகவரதன் (வயது47). தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு டூவி புரம் 5-வது தெரு பகுதியில் சென்றார்.
அப்போது அங்குள்ள ஒருவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி இருந்துள்ளார். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு கலியுகவரதனை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
முதலில் அவர் ஏட்டு என்பது பொதுமக்களுக்கு தெரியாது. பின்பு தர்ம அடி கொடுத்த போது கலியுக வரதன் தான் போலீஸ் ஏட்டு என்பதை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது குறித்து ஏட்டு கலியுகவரதன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி புதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியுகவரதன் (வயது47). தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு டூவி புரம் 5-வது தெரு பகுதியில் சென்றார்.
அப்போது அங்குள்ள ஒருவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி இருந்துள்ளார். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு கலியுகவரதனை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
முதலில் அவர் ஏட்டு என்பது பொதுமக்களுக்கு தெரியாது. பின்பு தர்ம அடி கொடுத்த போது கலியுக வரதன் தான் போலீஸ் ஏட்டு என்பதை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது குறித்து ஏட்டு கலியுகவரதன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.