search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ibrahim"

    • குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

    இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தீபிகா காகர்.
    • இவர் இந்தி பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

    பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி தொடர்களான 'சசுரால் சிமர்கா', 'பாலிகாவது' போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் தீபிகா காகர். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தி வந்த பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். தீபிகா காகர் 2011-ஆம் ஆண்டு ரவுணக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015-ஆம் ஆண்டு ரவுணக்கை விட்டு பிரிந்து விட்டார்.


    இப்ராஹிம்- தீபிகா

    அதன்பின், 'மூன்று முடிச்சு' என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் தனக்கு கணவராக நடித்த ஷாயிப் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது.


    இப்ராஹிம் பதிவு

    இது குறித்து தீபிகா- இப்ராஹிம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று (ஜூன் 21) அதிகாலை எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. எங்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×