search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICMR"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்
    • கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளது

    இந்தியாவில் வரும் 2045 க்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் [ICMR] எச்சரித்துள்ளது. BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.

     ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின்படி , 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

    • அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும்

    இந்தியாவில் நிலவி வரும் அதீத வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் உடலை நீரேற்றத்துடன் குளுமையாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டயப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்திவருகின்றனர். அதிலும் முக்கியமாக கரும்பு ஜூஸை அனைவரும் விரும்பி உட்கொள்கின்றனர்.

     

    இதனால் நகரங்கள் மற்றும் டவுன்களில் வீதிக்கு வீதி ஜூஸ் கடைகளும் கரும்புச்சாறு கடைகளும் முளைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

     ஆரோக்யமான உணவு முறை குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடபட்டுள்ளது.

     

    மேலும் அந்த அறிக்கையில், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும், பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

     

    • வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது.
    • பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

    உணவில் வீட்டு சமையல் ஆரோக்கியமானதா ? அல்லது வெளி உணவு ஆரோக்கியமானதா ? என்று கேட்டால் வெளி உணவு சாப்பிட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய வீட்டு சமையலே சிறந்தது என்று.

    ஆனால், வீட்டு சமையலிலும் நம் செய்யும் முறையில் ஏற்படும் தவறுகளால் வீட்டு உணவும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஐஎம்சிஆர் வீட்டு உணவை மிகவும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான வழிகளைப் பட்டியலிட்டுள்ளது. 

    வீட்டில் சமைப்பது பலருக்கு நிம்மதியாக இருக்கும். இது சிலருக்கு அது ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மற்றவர்களுக்கு சமையல் ஒரு வழக்கமான சாதாரண வேலையாகத் தோன்றும்.

    ஆனால் வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது. இருப்பினும், அதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய பண்புகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது.

    உடல் எடையை குறைக்கும் போது கூட, வீட்டு உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றும் சில சமையல் நுட்பங்கள் அதில் உள்ளன.

    இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17வது அத்தியாய வழிகாட்டியை வெளியிட்டது.

    இது இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுப் பழக்கங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை எடுத்துக்காட்டுகிறது.

    முதலில், சில பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

    * அதிக வேகவைத்த காய்கறிகள்:

    காய்கறிகளை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும். ஏனெனில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெப்பத்தை உணர்திறன் கொண்டவை. அவை நீண்ட நேரம் சமைப்பதன் மூலம் அழிக்கப்படலாம்.

    * எண்ணெய் அல்லது வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துதல்:

    அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்துவது உணவுகளில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இது எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

    * உயர் வெப்பநிலை சமையல்:

    அதிக வெப்பநிலையில் சமைப்பது, டீப் ப்ரை போன்றவை புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய அக்ரிலாமைடுகள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும்.

    * அதிகப்படியான உப்பு பயன்பாடு: சமைக்கும் போது அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்பைச் சேர்ப்பது உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும்.

    உணவுப் பாதுகாப்பைப் புறக்கணித்தல்:

    முறையற்ற உணவைக் கையாளுதல், சேமித்தல் அல்லது சமைத்தல் ஆகியவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படலாம்.

    ஐஎம்சிஆர்-ன் சமீபத்திய உணவு வழிகாட்டுதல்கள் "அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட ஆரோக்கியமற்றதாகிவிடும். 

    அதிக கொழுப்பு அல்லது அதிக சர்க்கரை உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கின்றன. இது உணவில் விரைவாக மாறுகிறது.

    அதிக உப்பு கொண்ட உணவுகள் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கின்றன. சிறுநீரகங்கள் பாதிப்புக்கு வழி வகுக்கின்றன. எனவே, அதிக உப்பு உட்கொள்வது ஆரோக்கியமற்றது.

    இந்த பொதுவான சமையல் தவறுகளை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நம் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் சுவையான, சத்தான உணவை உருவாக்கலாம்.

    சமையலில் மிதமான மற்றும் சீரான அணுகுமுறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • இந்தியாவில் அனைத்து வித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது.
    • எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.

    உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் சப்ளிமெண்ட் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    இவற்றை உட்கொள்வதால் உடலின் செயல்பாடுகளில் பலவித மாற்றங்களும், உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது.




    இந்த நிலையில் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) இந்திய மக்களுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் மற்றும் செயற்கை உணவு பொருட்களில் சர்க்கரை, கலோரி அல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவைகள் இருக்கலாம்.இதை சாப்பிடுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. 

    எனவே உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.




    முட்டை, பால் பால், மோர் மற்றும் சோயா பீன்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்ற பல்வேறு தாவர அடிப்படையிலான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புரத பவுடர்கள் சப்ளிமெண்ட்ஸ், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் தசை வளர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்துவதால் பலவித எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொள்வதால் எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உருவாகும். ஒவ்வொருவரும் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.




    நாம் சாப்பிடும் உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல் மிகவும் அவசியமாகும்.பெரும்பாலான கலோரிகள், கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்ற இயற்கை பொருட்களில் நமது உடலுக்கு கிடைக்க வேண்டும்.

    இந்தியாவில் அனைத்துவித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது. எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.




    மேலும், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் கரோனரி இதய நோய் (CHD)மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றின் கணிசமான விகிதத்தைக் குறைப்பதுடன், டைப் 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    • மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    மேலும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், மரபு தொடர்பான நோய்கள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால்தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
    • கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்

    கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

    ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

    இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.

    ×