என் மலர்
நீங்கள் தேடியது "Illegal money transfer"
- 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
- மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு
சென்னை:
கடந்த 1997-2000-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அதேபோல, இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு துணையாக செயல்பட்ட ஹைதர் அலி என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கும் 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டது
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை ஐகோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14-ந்தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒரு இடையீட்டு மனுவை ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவானது சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
- சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு.
- ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின்.
வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்குக்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நிலையில், ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் தங்கள் கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செல்போன் எண்ணை அதிகாரிக்கு வழங்கி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
பாஸ்வோர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாற்றினால் அதுகுறித்த தகவலை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும், என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
- ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடை 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
- ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன
சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை செய்தது. சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.