என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Captain"

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
    • இவருக்கு முன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.

    கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.
    • உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் டிரா ஆனது.

    இந்த போட்டி முடிந்த பிறகு அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அவர் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாகாதது ஏன் என்பது குறித்து தமிழக வீரர் அஸ்வின் விளக்க அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகாததற்கே ENGINEERINGதான் காரணம். உன்னால் முடியாது என்று சொன்னால்தான் நான் எழுவேன்.

    உன்னால் முடியும் என்று சொன்னால் தூங்கிவிடுவேன். அதுபோலதான் 'நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகலாம்' என நிறைய பேர் என்னிடம் சொன்னதால்தான் நான் தூங்கிவிட்டேன்.

    என அஸ்வின் கூறினார்.

    ×