என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India England series"

    • கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன்.
    • எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக கடந்த நவம்பர் 19-ந் தேதி முடிந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. முகமது ஷமி தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் உடல் தகுதியை பொறுத்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இருந்து விலகினார்.

    இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் முகமது ஷமி உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இது குறித்து முகமது ஷமி கூறுகையில், 'கணுக்கால் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறேன். எனது உடல் தகுதியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கணுக்காலில் லேசான விறைப்பு இருக்கிறது. ஆனாலும் நன்றாகவே உள்ளேன். பயிற்சியையும் தொடங்கி விட்டேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன். சவாலான போட்டிக்கு முடிந்த அளவுக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றார்.

    • நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
    • நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 247 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 97 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இனி இந்தியா இவ்வாறு தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்பது எல்லாம் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி நினைத்து அதிரடியாக விளையாடும்போது சில போட்டிகளில் 120 ரன்கள் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். இதே ஸ்டைலில் தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம்.

    நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம். அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிகம் ஆதரவு அளிக்கப் போகின்றோம். சில சமயம் இப்படி அதிரடி காட்டும் வீரர்களிடம் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனென்றால் பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் இந்த இளம் வீரர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

    மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை. ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை நமது இளம் வீரர்கள் அதிக முறை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இனி இந்திய கிரிக்கெட். முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும் போது அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும்.

    140 கோடி இந்திய மக்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்பதை எங்களுடைய வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஷ்னோயும் எங்கள் பந்துவீச்சின் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பந்து வீசுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கில் நாங்கள் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாட போகிறோம்.

    இன்றைய ஆட்டத்தில் துபே நான்கு ஓவர்களை வீசினார். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களை தவிர எஞ்சிய அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். இனி டி20 கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்படும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வோம். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை நாங்கள் நிச்சயம் கொடுப்போம்.

    என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி. #ENGvIND #Ganguly
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டரை மாதங்களாக நடக்க இருக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இந்த தொடரை இந்தியாவில் ஒளிப்பரப்பு உரிமை பெற்றுள்ள டிவி கங்குலியை நியமித்துள்ளது.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘கடந்த காலங்களில் இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலான இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது. எனினும், தற்போதுள்ள மிகச்சிறந்த அணியால் தொடரில் மிகவும் நெருக்கமான போட்டியை வெளிப்படுத்துவோம் என்று நினைக்கிறேன்.



    இங்கிலாந்தில் நான் விளையாடிய குறித்து ஏராளமான நினைவுகள் உள்ளன. இந்த தொடரின்போது என்னுடைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார்.

    கங்குலி உடன் சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஸ்வான் ஆகியோரும் வர்ணனையாளராக செயல்பட இருக்கின்றனர்.
    ×