என் மலர்
நீங்கள் தேடியது "Indian Ocean"
- விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது.
- தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீண்டும் வந்துள்ளது. நேற்று அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்திருப்பது செயற்கைகோள் அனுப்பியுள்ள படங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில், உள்நாட்டிலேயே நவீன தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை முதல் முறையாக ஏவி இந்தியா சோதனை நடத்தியது அப்போது சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்தது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது. இந்திய கடற்படை தளங்களின் செயல்பாடுகளையும் அந்த சீன உளவு கப்பல் கண்காணித்தது. பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து சென்று விட்டது.
இந்த நிலையில் சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்துள்ளது. சீன நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை கடலுக்கு அடியில் நிலை நிறுத்துவதற்காக சீன உளவு கப்பல் நீருக்கு அடியில் ஆய்வுகளை நடத்துவதாக சந்தேகிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தலைவர் தினேஷ் கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் நுழைந்துள்ளது. இதை செயற்கைகோள் அனுப்பிய படம் மூலம் கண்டறிந்துள்ளோம். அந்த சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து விடுவோம்' என்றார்.
தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது’ எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. #IMD #TNRains #CycloneFani
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியையொட்டி இந்திய பெருங்கடல் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
புதுவை, மரக்காணம், சீர்காழி, செய்யூர், மகாபலிபுரம், திண்டிவனம், வேதாரண்யம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், மேட்டூர், ஆலங்குடி, பரங்கிப்பேட்டையில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. #IMD #TNRain