என் மலர்
நீங்கள் தேடியது "IndiGo Airlines"
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
- இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.
அகமதாபாத்:
சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.
உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.
எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
- தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,
இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.
இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.