என் மலர்
நீங்கள் தேடியது "injustice"
- சமூக அமைப்புகள் கோரிக்கை
- அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயக்குமார், திராவிடர் கழகம் அன்பரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் ,பி போல்ட் பஷீர் அகமது, பெரியார் சிந்தனை இயக்கம் தீனா, இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட், முற்போக்கு மாணவர் கழகம் தமிழ்வாணன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் பேசிய சமூக அமைப்பினர், ஜனநாயக முறையில் சபாநாயகர் செயல்பட்டால் எம்.எல்.ஏ. என்ற முறையில் சந்திர பிரியங்காவுக்கு ஏற்றப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
ஜாதி ரீதியாகவும் பாலின ரீதியாக அவர் கொடுமை செய்யப்பட்டது குறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு சபா நாயகர் உத்தரவிட வேண் டும் என வலியுறுத்தினர்.
- மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
- அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும்.
இன்று நம்மில் பலர், பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவது போன்ற கடமைகளை செய்தாலே போதும், சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து, அன்பு, நேர்மை, நீதி ஆகிய நற்பண்புகளை வளர்த்து, போட்டி, பொறாமை, புறம், நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி போன்ற அல்லாஹ் வெறுக்கக்கூடிய செயல்களை வெறுத்து வாழ்ந்து, தங்கள் குழந்தைகளுக்கும் அதனையே கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கு அல்லாஹ்விடம் கேள்வி, கணக்கு கடுமையாக இருக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் `வறியவர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, `இம்மையில் மூட்டை, மூட்டையாக நன்மைகளை சேர்த்து விசாரணைக்காக ஒருவர் வருவார். அவருடைய நன்மைகளில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கப்படும்.
அதாவது இம்மையில் மற்றவர்களை திட்டி இருப்பார், அவதூறு கூறியிருப்பார், உரிமைகளைப் பறித்திருப்பார், அல்லது அநீதம் இழைத்திருப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி கொடுக்க நன்மைகள் எதுவும் இல்லை எனும் நிலை வரும்போது அவர்களின் பாவங்கள் அந்த நபர் மீது சுமத்தப்படும். அவரது ஈடேற்றத்திற்கு ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் நரகில் தூக்கி வீசப்படுவார்', இவர்தான் வறியவர் என்று கூறினார்கள்.
அண்டை வீட்டினர் அந்நியராக இருந்தாலும் அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்லும் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், அநீதி இழைக்கும் மக்களைப் பற்றியும், அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றியும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'நான் அநீதியை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன். எனவே நீங்களும் உங்களுக்குள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும். அப்பொழுது ஈடேற்றம் பெறுவதற்கான வழியே இருக்காது'.
ஒருவரை ஆளுநராக நியமித்து அனுப்பும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி இவ்வாறு அறிவுரை பகர்வார்கள், 'அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவிற்கும், இறைவனுக்கும் எந்த வித தடையும் இருப்பதில்லை'.
'அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவரின் துஆ அவசியம் ஏற்கப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள், 'எவருடைய நாவின் தீங்கிலிருந்தும், கரங்களின் தீங்கிலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்'. நாம் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவோ, கெடுதலோ, அநியாயமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் என்று தெரிந்தும், அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே.
`முஃமின்கள் யார்' என்று கேட்கப்பட்டது. `யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இன்று போகிற போக்கில் தங்கள் சொல்லாலும், செயலாலும் பிறருக்கு துன்பத்தைத் தரக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.
சரி, இறைவன் வெறுக்கக்கூடிய காரியங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விலக்கிக் கொள்வது எப்படி?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்றால், நிச்சயம் நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களே.
இரண்டாவதாக நம்முடைய வணக்க வழிபாடுகளில் உள்ளத்தூய்மையும், இறைவன் எனக்கு மிகச் சமீபமாக இருந்து என்னுடைய அத்தனை செயல்களையும் உற்று நோக்குகிறான் என்ற அச்சமும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட அச்சம் என்றால், இறைவனைக் குறித்தான பயத்தில் தானாகவே கண்ணீர் வர வேண்டும். தொழுகையில் மட்டுமல்ல, பகலிலும், இரவிலும், குர் ஆன் ஓதும் பொழுதும், ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா இருந்தாலும் உள்ளச்சத்ததோடு உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.
இறைவன் நம்முடைய வணக்க வழிபாடுகளையும், மற்ற நற்குணங்களையும் பொருந்திக் கொள்வானாக. நம்முடைய பாவங்களையும் மன்னித்து, குடும்பம், குடும்பமாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி, அவனின் திருமுகத்தைப் பார்க்கக் கூடிய பெரும் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.
- எங்களின் 2-வது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம் என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் துலே பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
எங்களின் இரண்டாவது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம்.
ஏனென்றால் எங்களின் முதல் யாத்திரையில் விவசாயிகள், இளைஞர்கள் அல்லது பெண் யாராக இருந்தாலும், வன்முறைக்கும் வெறுப்புக்கும் காரணம் சொன்னது அநீதிதான்.
90 சதவீதம் இந்தியர்கள் அநீதியை எதிர்கொள்கிறார்கள் தினமும்.
இது உங்களுக்கெல்லாம் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள 22 பேரின் சொத்து, 70 முக்கிய நபர்களின் சொத்துக்கு சமம் என தெரிவித்தார்.
#WATCH | Dhule, Maharashtra: During his address at Bharat Jodo Nyay Yatra, Congress leader Rahul Gandhi says, "..In our second Bharat Jodo Yatra, we have added a new word 'Nyay' because in our first yatra whoever we met whether farmers, youth or female, said the reason for… pic.twitter.com/j0hKTyCqHk
— ANI (@ANI) March 13, 2024