என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irattai ilai"

    • சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.
    • பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

    வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

    அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.

    பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
    • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

    கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 'அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏராளமான புகார்களை அளித்துள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தேர்தல் ஆணையம் எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வக்கீல்களிடம் நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வக்கீல் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ×