search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Smelting Mill"

    • கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பி க்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 8-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • 17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எம். சண்முகம் தலைமையில்,பல்லடம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், வீரபாண்டி பகுதி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஓ.பி.எஸ்.சிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இதே போல பா.ஜ.க.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இரும்பு உருக்காலை அனுமதியின்றி இயங்கிய விவகாரத்தில் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

    ×