என் மலர்
நீங்கள் தேடியது "ISIS"
சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். #SyriaIssue #Trump #Erdogan
வாஷிங்டன்:
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சிரியாவில் குர்திஷ் படையினர் வசம் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு, இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில் எஞ்சியுள்ள பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதன் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு சிரியா மற்றும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, துருக்கி இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்ததால், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு மீண்டும் சோதனை நடத்தியது. இதில் 3 பேர் பிடிபட்டனர். #NIA #ISIS #Punjab
புதுடெல்லி:
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி மற்றும் உபியில் கைது செய்யப்பட்ட 10 பயங்கரவாதிகள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு அளித்துள்ளது. #ISISModuleCase #NIA
புதுடெல்லி:
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் முகங்களை துணியால் மறைத்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். 10 பேரிடம் இருந்தும் மேலும் பல்வேறு தகவல்களை பெற வேண்டியிருப்பதால் அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்ஐஏ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #ISISModuleCase #NIA
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய தொடர் சோதனைகளில், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லாக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்மூலம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொல்லவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 10 பேர் கைதாகினர். #NIAdetains #NIAprobe #ISISmodule
புதுடெல்லி:
சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
‘ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம்’ என்னும் அமைப்பின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
கைதானவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர். #NIAdetains #NIAprobe #ISISmodule
சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
‘ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம்’ என்னும் அமைப்பின் மூலம் இவர்கள் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
கைதானவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர். #NIAdetains #NIAprobe #ISISmodule
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. #SyriaConflict #USTroops #UK
லண்டன்:
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
ஆனால், டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
டிரம்ப் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான டாம் துகண்ட்ஹாட் எம்பி தெரிவித்தார். அமெரிக்க படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது சிரியா மட்டுமின்றி ஈராக் அரசுக்கான ஆதரவையும் தொடருவதுதான் என்றும் டாம் கூறியுள்ளார். #SyriaConflict #USTroops #UK
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
ஆனால், டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் தெரிவித்துள்ளது.
‘‘சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கூட்டுப்படை தொடங்கியதில் இருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை கூட்டுப்படை கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் கிழக்கு சிரியாவில் ஐஎஸ் ஆக்கிரமிப்பில் உள்ள கடைசி பகுதியையும் கைப்பற்றி முன்னேறினோம். ஆனால் இன்னும் நாம் முன்னேற வேண்டி உள்ளது. அவர்களிடம் (ஐஎஸ்) பெரிய பிராந்தியம் இல்லாதபோதும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும்.

சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
டிரம்ப் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான டாம் துகண்ட்ஹாட் எம்பி தெரிவித்தார். அமெரிக்க படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது சிரியா மட்டுமின்றி ஈராக் அரசுக்கான ஆதரவையும் தொடருவதுதான் என்றும் டாம் கூறியுள்ளார். #SyriaConflict #USTroops #UK
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று வருகிறது. #SyriaConflict #SyriaISIS #USTroops
வாஷிங்டன்:
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை. #SyriaConflict #SyriaISIS #USTroops
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக டுவிட்டர் தளத்தில் வீடியோ போஸ்ட் செய்திருந்தார்.

அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை. #SyriaConflict #SyriaISIS #USTroops
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #ISIS
பாக்தாத்:
ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த இடங்களை மீட்பதற்காக ஈராக் ராணுவம் அமெரிக்கா உதவியுடன் போராடியது. சில மாதங்களுக்கு முற்றிலும் மீட்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் மட்டும் சில பகுதிகளை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த பகுதிகளில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 200 இடங்களில் புதை குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது புதை குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர்.
நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த புதைக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 புதைகுழிகளிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது. பல இடங்களில் புதைகுழிகள் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. புதைகப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
காணாமல் போனவர்கள் யார்? அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். #ISIS
ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த இடங்களை மீட்பதற்காக ஈராக் ராணுவம் அமெரிக்கா உதவியுடன் போராடியது. சில மாதங்களுக்கு முற்றிலும் மீட்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் மட்டும் சில பகுதிகளை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த பகுதிகளில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 200 இடங்களில் புதை குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது புதை குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர்.
நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த புதைக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 புதைகுழிகளிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது. பல இடங்களில் புதைகுழிகள் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. புதைகப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
காணாமல் போனவர்கள் யார்? அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். #ISIS
அச்சுறுத்தல் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 49 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ArjunSampath
கோவை:
இந்த சம்பவத்தையடுத்து அச்சுறுத்தல் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு 24 மணிநேர துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேசன் உள்பட 12 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவரது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மூகாம்பிகை மணி, குணா, சதீஷ், சுரேஷ், இளங்கோ, குளத்துபாளையம் சிவலிங்கம், ரத்தினபுரி சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
இதுதவிர முக்கிய பிரமுகர்கள் ஒருசிலர் வீடுகளுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மதத்தை பற்றி தவறாக கூறியதால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டினோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். #ArjunSampath
கோவை:
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் சென்னையில் இருந்து ரெயிலில் கோவைக்கு 5 பேர் வருவதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை போலீசார் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.

கைதான இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார்.
எனக்கு பேஸ்புக் மூலமாக கோவையை சேர்ந்த ஆசிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இதேபோல சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அனைவருமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்ததால் நண்பர்களானோம்.
எங்களது மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் கண்காணித்து வந்தோம். இதில் அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் வெறுப்பேற்றும் வகையில் பேசியும், பேஸ்புக்கில் பதிவு செய்து வருவதாக ஆசிக் கூறினார்.
அவர்கள் இருவரையும் கொல்வது என முடிவு செய்தோம். அர்ஜூன் சம்பத் அடிக்கடி டி.வி.க்களில் பேசி வருவதால் அவரை தெரியும். அன்புமாரியின் புகைப்படத்தை ஆசிக் எங்களுக்கு அனுப்பினார். இருவரையும் கொலை செய்ய ஆசிக்கை சென்னைக்கு வரச் சொன்னோம்.
ஆனால் ஆசிக் எங்களை கோவை வரச் சொன்னார். கொலைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனிய முத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் கூறினார்.
சம்பவத்தன்று நாங்கள் ரெயிலில் கோவை வந்தோம். ஆனால் எங்களை அழைத்து செல்ல ஆசிக் ரெயில் நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது கொஞ்சம் நேரமாகிவிட்டது, நீங்கள் நால்வரும் நேராக வீட்டுக்கு வாருங்கள் என ஆசிக் கூறினார்.
நாங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து பின்வாசல் வழியாக ஆசிக் வீடுநோக்கி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஆசிக் வந்துவிட்டார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள், ஆசிக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிக் மறைத்து வைத்திருந்த கொலை முயற்சிக்கு தேவையான 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேர் மீதும் உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ.- சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்), மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உக்கடத்தை சேர்ந்த பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. #ArjunSampath
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் சென்னையில் இருந்து ரெயிலில் கோவைக்கு 5 பேர் வருவதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை போலீசார் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.
இவர்கள் இந்து மக்கள் கட்சி(தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்பு மாரி உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.

கைதான இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார்.
இவரது இருசக்கர வாகனத்தின் முன்புறம் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இந்தியா அன்ட் ஜம்மு காஷ்மீர்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பேஸ்புக் மூலமாக கோவையை சேர்ந்த ஆசிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இதேபோல சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அனைவருமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்ததால் நண்பர்களானோம்.
எங்களது மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் கண்காணித்து வந்தோம். இதில் அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் வெறுப்பேற்றும் வகையில் பேசியும், பேஸ்புக்கில் பதிவு செய்து வருவதாக ஆசிக் கூறினார்.
அவர்கள் இருவரையும் கொல்வது என முடிவு செய்தோம். அர்ஜூன் சம்பத் அடிக்கடி டி.வி.க்களில் பேசி வருவதால் அவரை தெரியும். அன்புமாரியின் புகைப்படத்தை ஆசிக் எங்களுக்கு அனுப்பினார். இருவரையும் கொலை செய்ய ஆசிக்கை சென்னைக்கு வரச் சொன்னோம்.
ஆனால் ஆசிக் எங்களை கோவை வரச் சொன்னார். கொலைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனிய முத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் கூறினார்.
சம்பவத்தன்று நாங்கள் ரெயிலில் கோவை வந்தோம். ஆனால் எங்களை அழைத்து செல்ல ஆசிக் ரெயில் நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது கொஞ்சம் நேரமாகிவிட்டது, நீங்கள் நால்வரும் நேராக வீட்டுக்கு வாருங்கள் என ஆசிக் கூறினார்.
நாங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து பின்வாசல் வழியாக ஆசிக் வீடுநோக்கி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஆசிக் வந்துவிட்டார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள், ஆசிக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிக் மறைத்து வைத்திருந்த கொலை முயற்சிக்கு தேவையான 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேர் மீதும் உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ.- சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்), மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உக்கடத்தை சேர்ந்த பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. #ArjunSampath
சமீப காலமாக ஐஎஸ் இயக்கம் சந்தித்து வரும் தோல்விகள் இறைவன் அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். #ISIS #AlBaghdadi
டமாஸ்கஸ்:
சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தற்போது பலத்த பின்னடவை சந்தித்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி ரஷிய தாக்குதலில் இறந்து விட்டதாக இரண்டு முறை கூறப்பட்டது.
எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாக கூறின. கடந்த ஓராண்டாக அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் அவர் பேசுவதாவது, "ஐஎஸ் சமீபத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளது. கடவுள் நம்மை சோதிக்கும் காலம் தான் இது. இந்தக் காலகட்டத்தை பொறுமையுடன் கையாள வேண்டும். பொறுமையோடு இருந்தால் இறைவன் நிச்சயம் நற்செய்தியை அறிவிப்பார். நமது இயக்கத்தினர் பசியுடனும் அச்சத்துடனும் தற்போது வாழ்கின்றனர். இது கடவுள் வகுக்கும் சோதனைக் காலம்'' என்று கூறியுள்ளார்.
எனினும், இந்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். #NIA #Arrest
ஐதராபாத்:
இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3-வது நபரான அட்னான் ஹசன் என்பவருக்கு எதிரான விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த பயங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லா பாசித் (வயது 24), அப்துல் காதிர் (19) ஆகிய இருவர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். முன்னதாக ஐதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், பல்வேறு சட்ட விரோத பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர். #NIA #Arrest #Tamilnews
இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3-வது நபரான அட்னான் ஹசன் என்பவருக்கு எதிரான விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த பயங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லா பாசித் (வயது 24), அப்துல் காதிர் (19) ஆகிய இருவர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். முன்னதாக ஐதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், பல்வேறு சட்ட விரோத பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர். #NIA #Arrest #Tamilnews
சோமாலியாவில் 27 ராணுவ வீரர்களை கொன்று ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் பயங்கரவாத குழு அறிவித்துள்ளது. #Somalia #alShabaab
மொகாடிஷு:
ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது.
இந்நிலையில், சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது. ‘வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம்’ என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.