என் மலர்
நீங்கள் தேடியது "ISL"
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.
- சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
சென்னை:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது.
- கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
- பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பெங்களூரு:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.
சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.
- விக்டர் மோங்கில் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.
- மேலும் விக்டர் மோங்கில் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
சென்னை:
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணி கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ் டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்தது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.
இந்த நிலையில் தற்போது அந்த அணி ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.
மேலும் இவர் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.
நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தி அணியில் வெற்றிக்குரிய கோலை 87-வது நிமிடத்தில் பார்த்தோலோம் ஒக்பேச் அடித்தார். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி 13-வது லீக்கில் ஆடி சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் ராகுல் பெகே (34-வது நிமிடம்), சுனில் சேத்ரி (77-வது நிமிடம்) கோல் போட்டனர்.
6-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.