என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO Chairman"

    • சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.
    • பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

    உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

    மறைந்த கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்.

    2003 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மீனவர்களுக்கான புதிய செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து மேலும் மேம்படுத்த முயற்சி செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #ISROChairman
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இது 3-வது தொலைதொடர்பு செயற்கைகோள். நவீன தொழில்நுட்பத்துடன் 6 மாதம் கூடுதலாக இயங்கக்கூடியது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம்.



    மீனவர்களுக்கான செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து அதை இன்னும் மேம்படுத்த முயற்சி செய்வோம். மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman

    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    ×