என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagadeep Dhankar"

    • இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என துணை ஜனாதிபதி கூறினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார்.

    இதன்பின், லண்டனில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இதேபோல், மற்றொரு நிகழ்வில் பேசுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் மைக்ரோபோன்கள் அணைத்து வைக்கப்பட்டு விடும். அதனால் அவர்கள் பேச முடியாதபடி செய்யப்படும் என்று கூறினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் நேற்று பேசினார்.

    சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆயுர்வேத மஹாகும்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது, அதுபோன்ற விசயங்கள் நெருக்கடி நிலை காலத்திலேயே செய்யப்பட்டன. ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. அது ஒரு கருப்பு அத்தியாயம். காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சில மனிதர்கள் தங்களது குறுகிய பார்வையால் நாட்டின் சாதனைகளை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார். ஜனநாயக மதிப்புகள் மிக முக்கியம் வாய்ந்தது. ஜனநாயகத்தின் அன்னையாக நாம் இருக்கும்போது, ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என பேசியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
    • பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.

    பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

     

     

    பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

     

    அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.

    • ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
    • கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது

    நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.

    நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது. 

     

    • ஜெகதீப் தங்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது

    பாராளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் நேற்று காரசாமான விவாதங்கள் நடந்தன. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், துணை குடையரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று  தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மோடி தலைமையிலான பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி அரசு அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பலரை அரசியல் நோக்கத்துடன் சிறையில் அடைத்து வருவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அறிந்ததே.

    இந்த நிலையில்தான் மாநிலங்களவையில் நேற்று பேசிய சஞ்சய் சிங், 'நான் பட்ஜெட்டை வாசித்தேன். அதில் சிறைகளுக்கான நிதியும் குறைந்துள்ளது. சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறைகளுக்கான பட்ஜெட்டை மட்டுமாவது உயர்த்துங்கள். படஜெட்டை உயர்த்தி சிறைகளை மேம்படுத்துங்கள். இப்போது என்னை அனுப்பினீர்கள், அடுத்து நீங்களும்[ஜெகதீப் தன்கர்] செல்ல நேரிடும் ' என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், சஞ்சய் சிங்கின் கோரிக்கை குறித்து மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவர் ஜே.பி நட்டா பரிசீலிக்க வேண்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2023 ஆம் ஆனது டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின.
    • . தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோச்சிங் சென்டர்கள் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     

    மேலும் கட்டிடத்தின் தரைதளத்தில் சட்டவிரோதமாக நூலகங்களை இயக்கி செயல்பட்டு வந்த ரவு உட்பட 13 கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மாணவர்கள் இதுநாள்வரை கோச்சிங் சென்டர்களில் சந்தித்துவந்த இன்னல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த மாநிலங்களவை மற்றும் மக்களவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின. இந்த விவாதத்தில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், இந்த பயிற்சி மையங்கள் கேஸ் சேம்பர் அறைகளுக்கு [இன அழைப்புக்காக ஹிட்லர் வதை முகாம்களில் பயன்படுத்தியதற்கு] சற்றும் குறைந்ததல்ல. தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மாணவர்களிடமிருந்து தானே. போட்டித்தேர்வு பயிற்சி என்பது [லாபம் கொழிக்கும்] வியாபாரமாகியுள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

     

    இதற்கிடையில் மாநிலங்களவை விவாதத்தில் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளின் இறப்பு குறித்து பேசும்போது, அமிதாப் பச்சன் மனைவியும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்கலங்கி வருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் பாராளுமன்ற மேல்சபையின் தலைவராக இருக்கிறார். அவருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே அவையில் மோதல் ஏற்படுகிறது. ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். 

    சட்டப்பிரிவு 67(பி)ன்படி இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டது.  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, இடதுாரி கட்சிகளை சேர்ந்த  50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டனர்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா? என்பது சந்தேகம்தான். பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதத்துடன் மேலும் ஒரு எம்.பி. ஆதரவு தேவை. அப்படி ஆதரவு இருந்தால்தான் மேல்சபை தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

    அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் சோனியா காந்தி-  ஜார்ஜ் சோரோ விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 25 -ந்தேதி பாராளுமன்றம் கூடியது. அதில் இருந்து ஒருநாள் கூட அவை முழுமையாக நடைபெறவில்லை. கடும் அமளியில் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

    • மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே 1949 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    1948 ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டு கொன்றார்.

    காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு விசாரணை நீதிமன்றம் கோட்சேவுக்கு மரண தண்டனை விதித்தது. 1949ஆம் ஆண்டு நவம்பரில் அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார்.

    தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உள்ள அவரது படத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியறது துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காந்தியின் இலட்சியங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கின்றன. நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத் துணை தலைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.

    இதைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீப் தன்கரின் உடல் நலம் குறித்து அறிய இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார்.

    மருத்துவமனையில் ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×