என் மலர்
நீங்கள் தேடியது "Jai Sriram"
- கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
- ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
துரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநருக்கு இந்த செயலுக்கு திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ" என்று பதிவிட்டுள்ளார்.
- பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
- விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.
மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.
இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.
விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.