என் மலர்
நீங்கள் தேடியது "Javed Miandad"
- ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும்.
- பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்.
கராச்சி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் சமீபத்தில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் விளையாட வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை.
ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள்.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன்.
- இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் வரமாட்டோம் என்ற தெளிவான தகவலை அனுப்பியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பொதுவான ஒரு இடத்தில் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் உள்பட இந்தியா விளையாடம் போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2027 வரையிலான போட்டியில் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடாது.
இந்த முடிவால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குதான் அதிக ஆதாயம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜாவித் மியான்தத் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன். ஐசிசி மற்றும் பிற கிரிக்கெட் நாடுகள் மத்தியில் அவசரப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பிசிசிஐ-யை விட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிக லாபம் ஈட்டியதாக நான் நினைக்கும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்தது.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மிகப்பெரிய தொடரை நடத்த இருக்கிறது. நீங்கள் (இந்திய அணி) பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.
இவ்வாறு மியான்டட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மேலும் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது சிறந்த செய்தியாக இருக்கும் என மொயின் கான் தெரிவித்துள்ளார்.