என் மலர்
நீங்கள் தேடியது "JDS"
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றார்.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் 8,51,881 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா567261 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
- மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார்.
- வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 567261 வாக்குகள் பெற்று இருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
குமாரசாமி இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசியலிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இன்று மக்கள் தாமாக முன்வந்து என்னை அன்புடன் வரவேற்றனர். மக்கள்தான் எனது பலம். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்காகவும் பாடுபடுவேன். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.
- பாஜகவின் ப்ரீதம் கவுடா, எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று துடித்தவர்.
- என் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தினர்.
மூடா ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள அம்மாநில பாஜக முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூரு வரை ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்த பாத யாத்திரை நடைபெறும் என்று பாஜக அறிவித்தது.
இந்நிலையில், பாஜகவின் இந்த பாத யாத்திரையில் பங்கேற்கப்போவதில்லை என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.
பாஜகவின் இந்த பாத யாத்திரை போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கூட தரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கனமழையைத் தொடர்ந்து மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த சமயத்தில் நாம் மக்களுடன் இருக்க வேண்டும். ஆகவே பாஜகவின் பாத யாத்திரை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பாஜகவின் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் பாஜகவின் ப்ரீதம் கவுடா, எங்கள் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று துடித்தவர். பென்-டிரைவ் விநியோகத்திற்கு யார் பொறுப்பு? என் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. ஹாசனில் என்ன நடந்தது என்பது இவர்களுக்கு தெரியாதா? அதற்கு யார் பொறுப்பு?'' என்று அவர் கோபத்துடன் பேசினார்.
ஹாசனில் நடந்து மக்களவை தேர்தலுக்கு முன்பாக, தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கியதாகக் கூறப்படும் பென்-டிரைவ்களை பெரிய அளவில் விநியோகம் செய்யப்பட்டதை குமாரசாமி குறிப்பிடுகிறார்.
- எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார்.
சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம்.
- தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 'ஜனதா மித்ரா' எனும் மக்களை குறை கேட்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. வீடு, வீடாக சென்று மக்களிடம் குறை கேட்பதும், ஜனதாதளம் (எஸ்) ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவதும் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஜூலை 1-ந்தேதி (நேற்று) முதல் 17-ந்தேதி வரை பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் நடக்கிறது. 17-ந்தேதி நிறைவு நாளில் பெங்களூருவில் பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜே.பி.பவனில் உள்ள சிறப்பு பூஜை நடந்தது.
இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா, அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எச்.டி.குமாரசாமி, கேரள மாநில நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ. தாமஸ் டி.மேத்யூ உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தேவகவுடா கொடி அசைத்து தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று நல்ல நாள். ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தொடங்கிவைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி, சி.எம்.இப்ராகிம் உள்பட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் வந்துள்ளனர். கேரளாவில் நமது கட்சியின் பெருமையை எடுத்துக்கூறி வரும் கிருஷ்ணன்குட்டியும் இங்கு வந்துள்ளார். முதலில் ஜனதா ஜல்தாரே திட்டத்தை செயல்படுத்தினோம்.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது ஜனதா மித்ரா திட்டத்தை தொடங்கியுள்ளோம். பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி வரை இந்த திட்டம் நடைபெறும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தேன். தேவகவுடா ஒரு கிராமத்துக்காரர், பெங்களூருவுக்கு என்ன செய்ய முடியும் என்று சொல்பவர்களும் உண்டு.
கட்சியை கவிழ்க்க யார் முயன்றாலும் பரவாயில்லை. நான் கட்சியை பலப்படுத்த போராடுவேன். பல முறை கட்சியை அழிக்க சிலர் முயன்றனர். இருப்பினும் கட்சியை காப்பாற்றி இன்றும் கட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு. அதை பொருட்படுத்தாமல் நான் நூற்றாண்டாக போராடி இன்று கட்சியை வெற்றி பாதையில் அழைத்து சென்று வருகிறேன். இங்குள்ள மக்களைப் பார்த்தால் நமது கட்சியின் பலம் என்னவென்று தெரியும். நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம். ஜனதா மித்ரா திட்டத்துடன் நான் இருப்பேன். கட்சியை யார் அழிக்க முயன்றாலும், முடியாது. கட்சியை காக்கவும், வெற்றிக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகாவில் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
- மீதமுள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின்போது ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச கவுடா தங்கள் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி ஓட்டளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அதற்கு ஓட்டு போட்டேன் என தெரிவித்தார்.
அதேபோல், மற்றொரு ம.ஜ.த. எம்எல்ஏ ரேவண்ணா, தான் ஓட்டளித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டளித்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஆட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்யலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் திட்டத்தை முறியடிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மேலும், நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் சித்தராமையா கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், பாஜகவின் பகட்டு வார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.
தேவைப்பட்டால் எம்எல்ஏக்களை சொகுசு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.
இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நுண்ணீர் பாசன துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். #ITRaid #JDS #CSPuttaraju
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதில் உடுப்பி- சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய 3 தொகுதிகளும் மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த தொகுதிகளில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.
எனவே அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இருந்தும் தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை.
எனவே 3 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா போட்டியிட உள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே அந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
எச்.டி.தேவேகவுடாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமோத் ஏற்கனவே ‘பி’ படிவம் பெற்று விட்டார். அவர் இன்னும் ஒரிரு நாளில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது.
மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தான் போட்டியிடுவதை சங்கர் உறுதி செய்துள்ளார். எச்.டி. தேவேகவுடா தும்கூரு தொகுதியில் போட்டியிட்டால் நான் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
உத்தரகன்னடா தொகுதியில் போட்டியிட வருவாய் துறை மந்திரி ஆர்.வி. தேஷ்பாண்டே மகன் பிரசாந்த் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கு மந்திரி தேஷ்பாண்டே முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதுகுறித்து என்னிடமோ, மகனிடமோ மத சார்பற்ற ஜனதா தளம் பேசவில்லை என மறுத்துள்ளார்.
மாற்று கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடன் வாங்கிய வரலாறு இந்தியாவில் எங்கும் நடைபெற்றதில்லை. தற்போது முதன் முறையாக மத சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளரை கடனாக பெறும் தேர்தல் கூத்து கர்நாடகத்தில் தொடங்கியுள்ளது. #LSPolls
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மேத்யூ டீ தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.
தாமஸ் ராஜினாமா செய்ததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டி, பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும், நாளை மாலை அவர் பதவியேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், அமைச்சர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KeralaMinisterResigns #MathewTThomas