search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeyangondam"

    • விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
    • கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் ரதி மன்மதன் கோவில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தனவேல் (வயது 40) என்பவர் இந்த கோவிலில் பூஜை செய்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் அந்த அமைபினர் திரண்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கோவில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பாண்டுரங்கன் என்பவர் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    கோவில் பூசாரி சந்தனவேலே கோவில் சிலையை உடைத்தது தெரியவந்தது. சந்தினவேல் பூஜை செய்யும் போல அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்தனராம். இதனால் அந்த இளைஞர்களை தண்டிக்குமாறு சந்தினவேல் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளார்.

    தொடர்ந்து இளைஞர்கள் கிண்டல் செய்ததால் அவர்களது தொல்லை தாங்க முடியாமல். வெறுப்புடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் மது போதையில் சாமி சிலையை அடித்து உடைத்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து பூசாரி சந்தினவேலுவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் வைத்த வேண்டுதலை சாமி நிறைவேற்றாததால் சிலையை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    ×