என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Josh Inglis"

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தினார்.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    • ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.
    • டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் 14-வது கேப்டனாக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.

    பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும் 3-வது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் இங்கிலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராகவும், டி20 வடிவத்தில் 14-வது வீரராகவும் இங்கிலிஸ் திகழ்வார்.

    ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களான கம்மின்ஸ், ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்னஸ் லாபுஷக்னே ஆகியோர் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

    • பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.

    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

    • இலங்கைக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே ஜோஷ் இங்கிலிஸ் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் உள்ளார்.

    காலே:

    இலங்கை- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி கவாஜா 232, ஸ்மித் 141, ஜோஷ் இங்கிலிஸ் 102 ஆகியோர் உதவியுடன் 654 குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ், அதிரடியாக விளையாடி 102 (94) சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட்டில் அதிரடி சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் உள்ளார்.

    2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 85 பந்துகளில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். 3-வது 4-வது இடங்கள் முறையே ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) 93 பந்துகளிலும் ப்ரித்வி ஷா (இந்தியா) 99 பந்துகளிலும் சதம் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×