என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JPNadda"

    • நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
    • சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.

    பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், காங்கிரஸ் - ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக இன்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.

    அவையில் ஆளும் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அமைப்புகளுடன் சேர்ந்த காங்கிரஸ் நாட்டை சீர்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது என்றும் அதன் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

     

    மேலும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.

    ஆனால் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பு எம்பிக்களும் மேஜையில் இருந்து எழுந்து முழக்கம் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரதிய ஜனதா கட்சியின் 60 சதவீத மாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது
    • புதிய தலைவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பவரா என்ற கேள்விக்கும் பதிலளித்தார்

    மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் [பாஜக] தேசிய தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறார்.

    அக்கட்சியில் தேசிய தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும் கடந்த மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

     

    பாஜகவின் 60 சதவீத மாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத மத்தியில் அவர்களுக்குப் பதிலாக புதிய தலைவர்கள் பதவியேற்பதற்கு ஏதுவாக தற்போது அமைப்பு தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், இது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

     

    எனவே பிப்ரவரி இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் பொறுப்பேற்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும் புதிய தலைவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பவரா என்று கேட்டதற்கு, அது அரசாங்கத்திலிருந்தோ அல்லது அமைப்பிலிருந்தோ இருக்கலாம் என்றும், இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். 

    • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
    • காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கே நியமிக்கப்பட்டுள்ளார்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் ஜூன் 15 முதல் ஜூன் 29 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும்.

    எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கேவை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் அந்த கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×